close
Choose your channels

'சார்பாட்டா பரம்பரை 2' படத்தில் இணைகிறாரா சந்தோஷ் நாராயணன்? என்ன சொல்லியிருக்கார் பாருங்க?

Tuesday, March 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான ’சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் பா.ரஞ்சித் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்டது. சமீப காலமாக பா ரஞ்சித்தின் படங்களில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவில்லை என்பதும் இதனை கிட்டத்தட்ட உறுதி செய்தது.

இந்த நிலையில் ’சார்பாட்டா பரம்பரை’ படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் பா.ரஞ்சிதிடம் ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்து வருகின்றனர். ’உங்களிடம் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து இந்த படத்தில் சந்தோஷ் நாராயணனை இணைத்துக் கொள்ளுங்கள்’ என்று கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ’சார்பாட்டா பரம்பரை 2' படத்தின் அறிவிப்புக்கு சந்தோஷ் நாராயணன் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர் ’வானம் விடிஞ்சிருச்சு காசு டா மேளத்தை !! என்று ’சார்பாட்டா பரம்பரை' படத்தில் இடம்பெற்ற பாடலின் முதல் வரியை பதிவு செய்துள்ளார். இதனை அவர் பா ரஞ்சித் மற்றும் ஆர்யாவுக்கு டேக் செய்துள்ள நிலையில் இருவரும் தங்களுடைய கருத்து வேறுபாடுகளை மறந்து இந்த படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment