close
Choose your channels

முதல்முறையாக இணையும் யுவன் ஷங்கர் ராஜா - சந்தோஷ் நாராயணன்.. எந்த படத்திற்கு தெரியுமா?

Thursday, July 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதல் முறையாக பிரபல இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து ஒரு படத்தில் பணிபுரித்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு இசையமைப்பாளர்கள் இணைந்து ஒரே படத்தில் பணி புரிவது என்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பதும் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, சங்கர் - கணேஷ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் சேர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார்கள் என்பது தெரிந்தது. அதேபோல் ’மெல்ல திறந்தது கதவு’ என்ற திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் எம்எஸ் விஸ்வநாதன் இணைந்து பணியாற்றி உள்ளார் என்பதும் இதே போல் ஒரே படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் சிலர் பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்காலத்தில் கூட ஒரு இசையமைப்பாளர் பணி செய்யும் படங்களில் இன்னொரு இசையமைப்பாளர் ஒரு பாடல் பாடுவது அதிகரித்து வருகிறது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களும் இன்னொரு இசையமைப்பாளரின் படங்களில் பாடல்களை பாடி உள்ளார்கள் என்பதும் தெரிந்தது.

அந்த வகையில் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கும் நிலையில் இந்த பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த இரு இசையமைப்பாளர்களும் இணைந்த பாடல் எப்படி இருக்கும் என்பதை நாளை வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

ராம் இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள ’ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.