இயக்குனராகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்தின் உதவியாளர்: ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,September 17 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கோச்சடையான்’ மற்றும் தனுஷ் நடித்த ’விஐபி 2’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்பது தெரிந்ததே. இந்த படங்களை அடுத்து அவர் பொன்னியின் செல்வன் என்ற வெப்தொடரை இயக்கவுள்ளதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ’விஐபி-2’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சந்தோஷ் என்பவர் தற்போது இயக்குனராக உள்ளார். அவர் இயக்கும் முதல் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது

இந்த படத்தில் அஜித்தின் விஸ்வாசம், விவேகம், உள்பட பல வெற்றிப்படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தயாரித்து உள்ளது என்பதும் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சந்தோஷ் தற்போது இயக்குனராகி உள்ளதை அடுத்து சௌந்தர்யா ரஜினி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

More News

தமிழக அரசுக்கு சூர்யாவின் நெஞ்சார்ந்த பாராட்டு: பரபரப்பு தகவல் 

நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வு குறித்து வெளியிட்ட அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.

விஜய் பட இயக்குனர் உடல்நலக்குறைவால் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

தளபதி விஜய் நடித்த சூப்பர்ஹிட் படமான 'வேட்டைக்காரன்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் திடீரென உடல்நலக் குறைவால் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 

ராகவா லாரன்ஸ், விஷாலை அடுத்து தீபாவளி ரிலீஸில் இணையும் சிவகார்த்திகேயன்?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் ஒருசில திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன

சிகரம்‌ தொட்ட சாதனையாளர், சாதிக்கத்‌ துடிக்கும்‌ இளமை‌யின் 'எவனென்று நினைத்தாய்': ராஜ்கமல் நிறுவனம் அறிக்கை!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'எவனென்று நினைத்தாய்' குறித்த படத்தின் அறிவிப்பு சற்றுமுன் வெளியானது என்பதை பார்த்தோம்.

லோகேஷ் கனகராஜ்-கமல்ஹாசன் படத்தின் டைட்டிலுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு:

மாநகரம், கைதி ஆகிய படங்களை அடுத்து தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' என்ற திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.