முடிவுக்கு வந்த சந்தானம் நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு

  • IndiaGlitz, [Monday,September 23 2019]

சந்தானம் நடித்த ’தில்லுக்கு துட்டு’ மற்றும் ஏ1 ஆகிய இரண்டு படங்களும் இந்த ஆண்டு அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ள நிலையில், தற்போது அவர் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று ’டகால்டி’.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதனை சந்தானம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

முதல்முறையாக சந்தானம் இந்த படத்தில் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். அவற்றில் ஒன்று மும்பையில் வாழும் தமிழ்ப்பையன் வேடம். சந்தானம் ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்திற்கு விஜய் நரேன் இசை அமைத்துள்ளார். தீபக்குமார் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த படம் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் சந்தானத்தின் ஹாட்ரிக் வெற்றி படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஷெரினுக்காக காரசாரமான ரிஸ்க் எடுக்கும் தர்ஷன்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று சேரன் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் தற்போது கவின், முகின், தர்ஷன், ஷெரின், லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகிய 6 பேர்கள் மட்டுமே உள்ளனர் 

இடைத்தேர்தலில் போட்டி இல்லை: கமல்ஹாசன் அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் தயாராகி வருகின்றன.

விஜய் சொன்னதை செய்ய தவறியதால் தவறு நடந்து கொண்டிருக்கின்றது: சீமான்

நடிகர் விஜய் சமீபத்தில் தனது 'பிகில்' திரைப்படத்தின் ஆடியோ விழாவில் அதிகபட்சமாக ஒரு 15 நிமிடங்கள் பேசியிருப்பார். ஆனால் அவர் பேசியதை வைத்து

அசுரனுக்கு ஆஸ்கார் மிஸ் ஆகாது: கலைப்புலி எஸ்.தாணு

தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய 'அசுரன்' திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கும் நிலையில் இந்த படம் ஆஸ்காரை மிஸ் செய்யாது என இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.

அஜித்தை எடுத்து ஜெயம் ரவி பக்கம் திரும்பிய போனிகபூர்

அமிதாபச்சன் நடித்த 'பிங்க் என்ற சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் படமான அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரித்த போனிகபூர், இந்த படத்தின் வெற்றியால்