close
Choose your channels

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Monday, March 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பீதி காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் புதிய படப்பிடிப்புகள் ஆரம்பமாகி வருகின்றன

இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் ’ஏ1’ பட இயக்குனரின் இயக்கத்தில் படம் ஒன்று உருவாகவுள்ளது என்று வெளியான செய்திகள் குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சந்தானம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். சந்தானம் ஜோடியாக அனைகா சோட்டி என்பவர் நடிக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே ‘காவிய தலைவன்’, ‘செம போத ஆகாதே’, ‘கீ’ போன்ற படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கினாலும் மார்ச் 31-ஆம் தேதி வரை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதால் ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே சந்தானம் நடித்த ’சர்வர் சுந்தரம்’, ‘டிக்கிலோனா’, ‘பிஸ்கோத்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன என்பதும் இந்த படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக விரைவில் வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment