சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

  • IndiaGlitz, [Monday,March 16 2020]

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பீதி காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் புதிய படப்பிடிப்புகள் ஆரம்பமாகி வருகின்றன

இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் ’ஏ1’ பட இயக்குனரின் இயக்கத்தில் படம் ஒன்று உருவாகவுள்ளது என்று வெளியான செய்திகள் குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சந்தானம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். சந்தானம் ஜோடியாக அனைகா சோட்டி என்பவர் நடிக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே ‘காவிய தலைவன்’, ‘செம போத ஆகாதே’, ‘கீ’ போன்ற படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கினாலும் மார்ச் 31-ஆம் தேதி வரை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதால் ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே சந்தானம் நடித்த ’சர்வர் சுந்தரம்’, ‘டிக்கிலோனா’, ‘பிஸ்கோத்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன என்பதும் இந்த படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக விரைவில் வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

த்ரிஷாவுக்கு பதில் யார்? சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' நாயகி குறித்த தகவல்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கிவரும் 'ஆச்சாரியா' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த திரிஷா திடீரென அந்த படத்திலிருந்து விலகினார்

பிரபுதேவா, சஞ்சிதா ஷெட்டி இணைந்து சந்தித்த பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலர் மகா அவதார் பாபாஜியின் தீவிர பக்தர்களாக இருந்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாபாஜியின் சீடர்களில் ஒருவரான பரமஹம்ச பிரஜானந்த மஹாராஜ் என்பவரை

என்ன நடக்கிறது மத்தியப் பிரதேச சட்ட சபையில்???

கடந்த 2008 டிசம்பரில் மத்தியப் பிரதேச சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 114 இடங்களை வென்றது. 2 பகுஜன் சமாஜ், 1 சமாஜ்வாடி

பிரபல நடிகரின் மகனை காதலிகின்றாரா யாஷிகா? வைரலாகும் புகைப்படங்கள்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான யாசிகா ஆனந்த் தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை அவ்வப்போது ஏற்படுத்தி வருவார் என்று தெரிந்தே 

டிக்டாக்கில் ஆபாசத்தின் உச்சம்: பணம் பறித்த 'போலி' கும்பல்

டிக்டாக் செயலியில் ஒருசில இளம்பெண்கள் ஆபாசமான பதிவுகளை செய்வதும் அதன் பின்னர் பிரச்சனை ஏற்படும் போது போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வது