ஒரே நாளில் வெளியாகும் இரண்டு சந்தானம் படங்கள்: ஒரு ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Saturday,January 11 2020]

தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகராக இருந்த நடிகர் சந்தானம், கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக புரமோஷன் ஆகி, தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ’தில்லுக்குதுட்டு 2’ மற்றும் ’ஏ1’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் உருவான ‘டகால்டி’ திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாகும் என்று நேற்று செய்தி வெளியானதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் சந்தானம் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் பல ஆண்டுகளாக ரிலீசாகாமல் கிடப்பில் இருந்த ’சர்வர் சுந்தரம்’ என்ற திரைப்படமும் அதே ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நடிகர்கள் கூட ஒரே நாளில் தாங்கள் நடித்த இரண்டு படங்களை வெளியிட தயங்குவது உண்டு. ஒரு சிறிய இடைவெளியில் தான் வெளியிடுவார்கள். இந்த நிலையில் சந்தானம் நடித்த ’சர்வர் சுந்தரம்’ மற்றும் ’டகால்டி’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஏதாவது ஒரு படம் பின்வாங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

'பட்டாஸ்' ரசிகர்களுக்காக வெளியாகும் 'ஜிகிடி கில்லாடி' : இன்னும் சில நிமிடங்களில்

தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் சமீபத்தில் சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்று ஜனவரி 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

கணவரையும் கள்ளக்காதலியையும் அடித்து நொறுக்கிய மனைவி: வைரலாகும் வீடியோ!

கள்ளக்காதல் பிரச்சனையால் குடும்பத்தில் தகராறு, விவாகரத்து மற்றும் கொலை வரை சென்ற செய்திகள் பலவற்றை தினந்தோறும் பார்த்து வருகிறோம்

வளர்ப்பு தந்தையால் தொல்லை: இயக்குனரை திருமணம் செய்து எஸ்கேப் ஆன நடிகை!

வளர்ப்புத் தந்தை மற்றும் தாயாரால் சித்திரவதை அனுபவித்த நடிகை ஒருவர் தான் நடித்துக்கொண்டு இருந்த படத்தின் இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டு எஸ்கேப்

'தர்பார்' படத்தின் வசனம் நீக்கம் குறித்து கமல்ஹாசன் கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 7000 திரையரங்குகளில் வெளியாகி தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று விறுவிறுப்பாக திரையில் ஓடி வருகிறது

விரைவில் ஒரு நாள் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வெடுப்பார்.. ரவிசாஸ்திரி.

தோனி,அவருடைய ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை விரைவில் முடிக்கக்கூடும் என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.