சானியா மிர்சாவுக்கு கிடைக்கும் புதிய பதவி

  • IndiaGlitz, [Tuesday,April 24 2018]

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கர்ப்பமாக இருப்பதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கடந்த 2010ஆம் ஆண்டு சானியா மிர்சா திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்து கொண்டாலும் அவர் இந்தியாவுக்காகவே டென்னிஸ் விளையாடி பல வெற்றிகளை குவித்தார். 

திருமணத்திற்கு பின்னர் சானியா மிர்சா பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் (2016), விம்பிள்டன் (2015), யூ.எஸ். ஓபன் (2015) சாம்பியன் பட்டமும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் (2009), பிரஞ்சு ஓபன் (2012), யூ.எஸ். ஓபன் (2014) சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார்

இந்த நிலையில் சானியா மிர்சா தனது சமூக வலைத்தளத்தில், தான் தாயாகவுள்ளதாக ஒரு படத்தின் மூலம் சூசகமாக தெரிவித்துள்ளார். அந்த படத்தில் ஒருபக்கம் மிர்சா என்றும் இன்னொரு பக்கம் மாலிக் என்றும் நடுவில் சின்னதாக மிர்சா மாலிக் என்றும் குறிப்பிட்டு தான் விரைவில் 'அம்மா' என்ற புதிய பதவியை அடையவுள்ளதை குறிப்பிட்டுள்ளார்

சானியா மிர்சாவின் இந்த டுவீட்டுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருவதோடும் அவருக்கு டென்னிஸ் ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்

More News

தமிழ்நாட்டை விட்டே சென்றுவிடுவேன்: ஞானவேல்ராஜா கூறியது ஏன்?

முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஞானவேராஜா. இவரது தயாரிப்பில் அல்லு அர்ஜூன் நடித்த '‘என் பெயர் சூர்யா... என் வீடு இந்தியா’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது

சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி தற்கொலை!

சென்னையில் கடந்த சில நாட்களாக காவல் துறையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

எச்.ராஜா, கனிமொழி கேள்விகளை ரஜினிகாந்த் தவிர்ப்பது ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் சற்றுமுன் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிர்மலாதேவி விவகாரம் குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்த்,

எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூலில் ஃபார்வேடு செய்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிர்மலாதேவி விவகாரம்: ரஜினி கூறிய கருத்து

கடந்த சில நாட்களாக அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.