ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு ரூ.1.25 கோடி செலவு செய்த சானியா மிர்சா

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக கோடிக்கணக்கான ரூபாய்களை தொழிலதிபர்களும், திரையுலக பிரபலங்களும் அளித்து வருகின்றனர். அதேபோல் விளையாட்டு துறையில் இருந்தும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர் 25 லட்சமும், சுரேஷ் ரெய்னா 52 லட்சமும், பிசிசிஐ 51 கோடியும் கொடுத்து உள்ளன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தனது அமைப்பின் மூலம் ரூ.1.25 கோடி ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் மட்டும் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உணவு இல்லாமல் தவித்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு ஏற்பாடு செய்ததாகவும், இதுவரை சுமார் ஒரு லட்சம் பேர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ததன் மூலம் தங்கள் அமைப்பு ரூ.1.25 கோடி செலவு செய்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சானியா மிர்சாவின் இந்த உதவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு: லட்சக்கணக்கான மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை

திருச்சி அருகேயுள்ள உறையூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டெல்லி கூட்டத்தில் பங்கேற்ற 1500 தமிழர்களில் 16 பேர்களுக்கு கொரோனா: மீதமுள்ளவர்களுக்கு?

டெல்லியில் சமீபத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்! பிரபல இயக்குனரின் நீண்ட பதிவு

கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் இந்தியாவுக்குள் எப்படி நுழைந்தது, அரசு எங்கெங்கே கோட்டை விட்டது, ஊடகம் இதற்கு முக்கியத்துவம் தராமல்

வீடு தேடி வரும் அத்தியாவசிய பொருட்கள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது 

ஒரு மாலை வாங்க கூட முடியவில்லை: பரவை முனியம்மா இறுதிச்சடங்கு குறித்துஒரு நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு

கிராமத்து பாடல்களை பாடும் பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா, நேற்று அதிகாலை காலமான நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஒருசிலர் மட்டுமே