இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அட்லியின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Friday,May 20 2016]

ஜீவா, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'திருநாள்' திரைப்படம் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜீவாவின் அடுத்தபடமான 'சங்கிலி புங்கிலி கதவை திற' படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


'தெறி' இயக்குனர் அட்லியின் "ஏ ஃபார் ஆப்பிள்' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். சூரி காமெடி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை Ike Radha இயக்கி வருகிறார்.

த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ராதிகா, ராதாரவி, தம்பிராமையா, இளவரசு, கோவை சரளா, தேவதர்ஷினி ஆகியோர்களும், ஜெய் மற்றும் அக்ஷரா கவுடா சிறப்பு தோற்றத்திலும் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.