அட்லியின் அடுத்த படமும் பாதி ரெடி

  • IndiaGlitz, [Wednesday,March 23 2016]

விஜய் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் 'தெறி' படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் அட்லி, தன்னுடைய 'ஏ ஃபார் ஆப்பிள்' என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் திரைப்படம் 'சங்கிலி புங்கிலி கதவை தொற'

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி தொடங்கி இடைவேளை இன்றி பழநியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் பழநி படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அத்துடன் 50% படம் முடிவடைவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


பின்னர் சென்னை திரும்பும் படக்குழு மே மாதத்துடன் படப்பிடிப்பை முடித்துவிடும் என்றும் வரும் செப்டம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, தம்பி ராமையா, கோவை சரளா, ராதிகா, ராதாரவி, இளவரசு, தேவதர்ஷினி, மொட்டை ராஜேந்திரம் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தில் ஜெய் மற்றும் அக்ஷரா கவுடா ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கின்றனர்., விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.