மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு சமீபத்தில் வெளியேறிய கவின், முதல் வேலையாக தனது தாயாரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஒரு போட்டியாளர் வெளியேறும்போது கமல்ஹாசனுடன் பேசுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் இந்த வாரம் கவின் முன்கூட்டியே வெளியேறிவிட்டதால் கமலுடன் பேசும் சந்தர்ப்பம் இல்லாமல் போனது. எனவே இன்று அவர் பிக்பாஸ் மேடையில் தோன்றி கமலஹாசனுடன் பேசும் காட்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முகினை மற்ற நால்வரும் எவிக்சன் பட்டியலில் உள்ள நிலையில், இன்று முதல் நபராக சாண்டி காப்பாற்றப்படுகிறார். கவின் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தபோது அதிர்ச்சிக்குள்ளாக்கிய சாண்டி, கவினின் மனதை மாற்ற பெரும் முயற்சி செய்தார். அது முடியாமல் போனதும் கவினுக்கு கண்ணீருடன் விடை கொடுத்தார் சாண்டி. இது கவினின் ஆதரவாளர்களை நெகிழ வைத்ததோடு, கவினுக்கு போட வேண்டிய ஓட்டுக்களை சாண்டிக்கு போட்டிருப்பதால் சாண்டி முதல் நபராக காப்பாற்றப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் மீதி உள்ள லாஸ்லியா, ஷெரின் மற்றும் தர்ஷன் ஆகிய மூவரில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்பதை சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ரூ.18 ஆயிரம் அபராதம்: தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்

மோட்டார் வாகன புதிய சட்டத்தின்படி போக்குவரத்து சாலை விதிகளை மீறுவோருக்கும், முறையான ஆவணங்கள் இல்லாத வாகன ஓட்டிகளுக்கும் பெரிய தொகை அபராதம் விதிக்கப்பட்டு

நிஜமான ஹீரோக்கள் யார் - சேரன்

கடந்த இரண்டு நாட்களாக ஒரு வீடியோ இணையதளத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு மலைப்பாம்பு ஒரு நாயை சுற்றிக் கொண்டுள்ளது.

வெளியே வந்த கவின் தாயாருக்காக செய்த முதல் வேலை!

கடந்த சில வாரங்களுக்கு முன் சிட்பண்ட் மோசடி ஒன்றில் சிக்கிய பிக்பாஸ் கவின் தாயார் ராஜலட்சுமி மற்றும் பாட்டி தமயந்தி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

'கேங் லீடர்' நாயகியை இயக்குனரிடம் பரிந்துரை செய்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படம் இன்று வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. எனவே இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

விஜய்க்கு வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம்?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையில் வெளியாக உள்ள நிலையில், அவரது அடுத்த படமான 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 3ம் தேதி தொடங்கும்