'சண்டக்கோழி' மூன்றாம் பாகம் குறித்து லிங்குசாமி

  • IndiaGlitz, [Sunday,October 14 2018]

விஷால், கீர்த்திசுரேஷ் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி 2' திரைப்படம் வரும் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் லிங்குசாமி, 'சண்டக்கோழி 3' படத்தின் திரைக்கதை விரைவில் தயாராகவிருப்பதாகவும் மூன்றாம் பாகத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார் சண்டக்கோழி முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையே 13 வருடங்கள் இடைவெளி ஆகிவிட்டது. ஆனால் 'சண்டக்கோழி 3' படத்தின் பணிகள் அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். .

விஷாலை வைத்து தன்னால் வேறு படம் இயக்க முடியாது என்றும் இயக்கவும் தோணவில்லை என்று கூறிய லிங்குசாமி, எனக்கு எந்த வேலை இருந்தாலும் சரி, விஷால் எத்தனை படங்களில் கமிட் ஆகியிருந்தாலும் சரி, விரைவில் 'சண்டக்கோழி 3 தொடங்கப்படும் என்பது உறுதி என்று லிங்குசாமி தெரிவித்தார். எனவே முனி, சிங்கம் படங்களை அடுத்து சண்டக்கோழி படத்தின் மூன்றாம் பாகத்தையும் விரைவில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்

More News

'96' திரைப்படம்: மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த ராம்-ஜானு

சமீபத்தில் வெளிவந்த '96' திரைப்படத்தை பார்த்தவர்கள் நிச்சயம் தங்களுடைய பள்ளி வாழ்க்கையை நினைக்காமல் இருக்க முடியாது

'மீ டூ' விவகாரம்: விஷால் அறிவித்த அதிரடி முடிவு

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி 'மீ டூ' ஹேஷ்டேக்கில் கூறிய பாலியல் புகார்கள் திரையுலகை மட்டுமின்றி தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய

தனுஷின் 'வடசென்னை' ரன்னிங் டைம் என்ன தெரியுமா?

தனுஷின் கனவுப்படங்களில் ஒன்றான 'வடசென்னை' திரைப்படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

விஜய், ரஜினிக்கு நடுவில் புகுந்த விஜய்சேதுபதி

நவம்பர் 6க்கும், நவம்பர் 29க்கும் இடையில் நவம்பர் 16ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்த 'சீதக்காதி' திரைப்படம் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

'சர்கார்' படத்தில் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்: டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்

விஜய் நடிக்கும் 'சர்கார்' படத்தின் ஒரு பாடலில் சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ள ஸ்ரீதர் மாஸ்டர் கூறியுள்ளார்.