'சண்டக்கோழி 2' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

  • IndiaGlitz, [Sunday,January 17 2016]

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் லிங்குசாமி பலவிதமான தடைகளை தாண்டி 'ரஜினிமுருகன்' படத்தை கடந்த பொங்கல் தினத்தை ரிலீஸ் செய்தார். இந்தபடம் அனைத்து விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றதோடு, ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்றுள்ளதால் உலகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளில் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் 'ரஜினிமுருகன்' படத்தை போலவே பென் மூவீஸ் நிறுவனத்துடன் இணைந்து 'இடம் பொருள் ஏவல்' படத்தையும் லிங்குசாமி விரைவில் ரிலீஸ் செய்யவுள்ளார்.


இந்நிலையில் லிங்குசாமி இயக்கிய சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகிய 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகத்தையும் விரைவில் அவர் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஷால் தற்போது மருது' படத்தில் நடித்து கொண்டிருப்பாதாகவும், இந்த படத்தை அவர் முடித்தவுடன் 'சண்டக்கோழி 2' படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

'சண்டக்கோழி 2' படத்தில் முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மீன் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர்களுக்கும் முக்கிய வேடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இந்த படம் வரும் பிப்ரவரியில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.