ரொம்ப பெருமையாக இருக்கின்றது: மீராமிதுன் கைது குறித்து சக பிக்பாஸ் நடிகை!

  • IndiaGlitz, [Sunday,August 15 2021]

நடிகை மீரா மிதுனை தமிழக காவல்துறை கைது செய்திருப்பது ரொம்ப பெருமையாக இருப்பதாக அவருடைய சக பிக்பாஸ் நடிகை ஒருவரே டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை மீரா மிதுன் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்ய முடியாது என்றும் தன்னை கைது செய்வது என்பது கனவில்தான் நடக்கும் என்றும் மீராமிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ வெளியான அடுத்த நாளே அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்த தமிழக காவல்துறையினர் கேரளாவில் அவரை கைது செய்தனர். தமிழக போலீசார் கைது செய்யும்போது போலீசாரை மிரட்டும் வகையில் ஒரு வீடியோவை மீராமிதுன் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீராமிதுன் கைது குறித்து பலர் காவல்துறையினர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சனம்ஷெட்டி, மீரா மிதுன் கைது குறித்து கூறுகையில் ’மீராமிதுனை தமிழக காவல்துறையினர் கைது செய்திருப்பது பெருமைக்குரிய ஒரு நடவடிக்கையாகும். சைபர் க்ரைம் காவல்துறையினர் மிகச்சரியான ஒரு நடவடிக்கையை இன்று எடுத்துள்ளனர். கடந்த சில வருடங்களாக நாங்கள் சகித்துக் கொண்ட அனைத்து வெறுக்கத் தக்க பேச்சுக்களும் இனி முடிவுக்கு வரும்’ என்று அவர் தெரிவித்துள்ளார். சனம் ஷெட்டியின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

More News

சிம்புவின் அம்மா சொல்வது 100% பொய்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பேட்டி!

சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தால் பெப்ஸி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இந்த பிரச்சனை குறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர்

இதுவரை நான் யாரிடமும் சொல்லாத ரகசியம்: விஜய்டிவி டிடி பேட்டியில் நயன்தாரா!

இதுவரை தான் யாரிடமும் சொல்லாத ரகசியம், ரொம்ப ரகசியம் என விஜய் டிவியில் டிடி எடுத்த பேட்டியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூறியுள்ளது என்ன? என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை எழுப்பியுள்ளது

யோகிபாபுவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்: வீரப்பனின் கதையா?

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் நல்ல வசூலையும் வெற்றியும்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறாரா பென்னி தயாள்? என்ன நடந்தது?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர் என்பதும் இந்த நிகழ்ச்சி 7 சீசன்களில் முடிவடைந்து தற்போது 8வது சீசன் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தப்பு பண்ணா தப்பிக்க முடியாது: மீரா மிதுன் கைது குறித்து ஜோ மைக்கேல்!

தப்பு செய்தால் யாரும் தப்பிக்க முடியாது என நடிகையும் சூப்பர் மாடலுமான மீராமிதுன் கைது குறித்து ஜோ மைக்கல் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்