பிக்பாஸ் வீட்டில் எதிர்பாராத வைல்ட்கார்ட் எண்ட்ரி? 

  • IndiaGlitz, [Wednesday,December 09 2020]

பிக்பாஸ் வீட்டில் தனி திறமையுடன் விளையாடிக்கொண்டிருந்த மிகச் சிலரில் ஒருவர் சனம்ஷெட்டி என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைப்பதாக விமர்சனம் செய்யப்பட்டாலும் தனக்கு சரி என்று தோன்றுவதையும் தனது கருத்தையும் போல்டாக தெரிவிப்பார் என்ற பாராட்டு அவருக்கு கிடைத்தது

அவர் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்ததால் அர்ச்சனா, பாலாஜி, ஆரி உள்பட அனைத்து போட்டியாளர்களுனும் அவர் மோதினார். இந்த நிலையில் கடந்த வாரம் ஞாயிறு அன்று குறைந்த வாக்குகள் பெற்றவர் அடிப்படையில் சனம்ஷெட்டி வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றத்தை பிக்பாஸ் ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. மிக்சர், வேர்க்கடலை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பலர் இன்னும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது தைரியமாக விளையாடிய சனம்ஷெட்டியை வெளியேற்றுவதா? என ரசிகர்கள் கொந்தளித்தனர்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சனம்ஷெட்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இன்னும் தனது சொந்த வீட்டிற்கு செல்லவில்லை என்றும் அவர் தனிமைப்படுத்துதல் ஹோட்டல் அறையில் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே யாரும் எதிர்பாராத வகையில் சனம்ஷெட்டி மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது

கடந்த சீசனிலும் குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட வனிதா ஒரு சில நாட்களில் மீண்டும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக நுழைந்தார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சனம்ஷெட்டியும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே வர வாய்ப்பு இருக்கின்றதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

இவரை என்னால் பாராட்டால் இருக்க முடியாது: நடராஜன் குறித்து ஆஸ்திரேலிய வீரர்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக யார்க்கர்கள் வீசி புகழ்பெற்ற நடராஜன் தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத

மகள் மரணத்தில் சந்தேகம்: சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி

சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலையில் சென்னை நாசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டல் அறை ஒன்றில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 

பாலாஜியை பழிவாங்க அர்ச்சனாவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற 'புதிய மனிதா' என்ற டாஸ்க்கில் பாலாஜி அணி மனிதர்கள் அணியாகவும், அர்ச்சனா அணி ரோபோ அணியாகவும் விளையாடினார்கள்.

'மாநாடு' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்: சிம்பு ரசிகர்கள் உற்சாகம்!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திடீரென டிவிட்டரில் அதிகளவு ட்ரோல் ஆகும் பிரதமர்… காரணம் தெரியுமா???

நேற்று முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில் அதிகளவு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.