பார்த்திபனின் இரண்டாம் பாக படத்தில் பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,February 27 2018]

நடிகர் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த 'உள்ளே வெளியே' படம் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 25 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பார்த்திபன் முடிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் பார்த்திபன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் ஆடுகளம் கிஷோர், ரோபோசங்கர், மம்தா மோகந்தாஸ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது இந்த தகவலை பார்த்திபனும் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே சூர்யாவின் 'மாஸ்' படத்தில் பார்த்திபனும் சமுத்திரக்கனியும் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் பார்த்திபனின் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நயன்தாராவின் அடுத்த படத்தின் முக்கிய தகவல்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது 'இமைக்கா நொடிகள்', கொலையுதிர்க்காலம்', நரசிம்ம ரெட்டி, கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

என்னிடம் ஆதாரம் இருக்கின்றது: சம்பள பாக்கி குறித்து கவுதமி

நடிகர் கமல்ஹாசன் தனக்கு 'தசாவதாரம்' மற்றும் விஸ்வரூபம்' படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்ததற்கு சம்பளம் தரவில்லை என சமீபத்தில் நடிகை கவுதமி புகார் கூறியிருந்தார்.

ஸ்ரீதேவிக்காக 37 வருட வழக்கத்தை புறக்கணித்த ரஜினி

நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்த நிலையில் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்த கோலிவுட் பிரமுகர்களான ரஜினி, கமல், நாசர் உள்பட பலர் மும்பை சென்றுள்ளனர்

கவுதமியின் சம்பள பாக்கி குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் விளக்கம்

கவுதமியின் சம்பள பாக்கி குறித்த குற்றசாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ராஜ்கமல் நிறுவனம் கூறியதாவ்து:

தமிழர்களுக்கு பெருமை தரும் வகையில் அஸ்வினுக்கு கிடைத்த புதிய பதவி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைபெறவுள்ள நிலையில் இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது.