கேப்டன் விஜயகாந்தின் 20 வருட கனவு.. சமுத்திரக்கனி சொன்ன சீக்ரெட்..!

  • IndiaGlitz, [Friday,March 15 2024]

கேப்டன் விஜயகாந்த் அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என 20 வருடங்களுக்கு முன்பே கனவு கொண்டிருந்தார் என்று சமீபத்தில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகில் அதிகமான இயக்குனர்களை அறிமுகம் செய்தது கேப்டன் விஜயகாந்த் என்பதும் நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக கமல், ரஜினி உட்பட ஒரு நட்சத்திர பட்டாளத்தையே மலேசியா சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று நடிகர் சங்க கடனை அடைத்தவர் என்ற பெருமை விஜயகாந்த்துக்கு உண்டு என்பது தெரிந்தது.

மேலும் அவர் திரை உலக நட்சத்திரங்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்து எண்ணம் கொண்டிருந்தவர் என்றும் அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று 20 வருடங்களுக்கு முன்பே கனவு கண்டிருந்தார் என்றும் அவரது படத்தை இயக்கிய சமுத்திரக்கனி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சமுத்திரக்கனி கடந்த 2003 ஆம் ஆண்டு ’உன்னை சரணடைந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில் அவரது இரண்டாவது படமே விஜயகாந்த் நடித்த ’நெறஞ்ச மனசு’ என்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அவர் விஜயகாந்துடன் பலமுறை மனம் விட்டு பேசியதாகவும் அப்போது தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக விரைவில் அரசியல் கட்சி தொடங்குவேன் என்றும் தெரிவித்ததாக சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவ்வப்போது விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிப்பார் என்றும் அவருடைய அரசியல் கட்சி என்பது 20 வருட கனவு என்றும் அதனால்தான் விஜயகாந்த் மறைந்த பின்னும் இன்றும் அவரது கட்சி தமிழகத்தில் வலுவாக இருக்கிறது என்றும் சமுத்திரக்கனி கூறியுள்ளார்.

More News

'குக் வித் கோமாளி' போட்டியாளர் கர்ப்பம்.. க்யூட் புகைப்படம் மூலம் அறிவிப்பு..!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் தான் கர்ப்பம் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

திடீரென மயங்கி விழுந்த 'மங்காத்தா' தயாரிப்பாளர்.. அப்பல்லோ மருத்துவமனை தந்த அதிர்ச்சி தகவல்..

'மங்காத்தா' உள்பட ஒரு சில படங்களை தயாரித்தவரும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மகனுமான துரை தயாநிதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும்

கண் திருஷ்டியை போக்கும் எளிமையான பரிகாரம்

கண் திருஷ்டி என்பது ஒருவரின் தீய பார்வையால் ஏற்படும் தீங்கு என்று நம்பப்படுகிறது. இது குழந்தைகள், பெரியவர்கள், வளர்ப்பு பிராணிகள், மற்றும் பொருட்களுக்கும் கூட ஏற்படலாம்.

காரடையான் நோன்பு 2024: பெண்களின் தாலி பாக்கியம், கணவர் ஆயுள் அதிகரிக்க விரதம் இருக்க வேண்டிய முறை

காரடையான் நோன்பு என்பது பெண்கள் தங்கள் கணவர் ஆயுள், தாலி பாக்கியம், குடும்ப ஒற்றுமை, செல்வம் பெருக விரதம் இருக்கும் ஒரு முக்கியமான விரதமாகும்.

'குக் வித் கோமாளி' நடுவராகும் தமிழ் சினிமா ஹீரோ.. பிரதமர் முதல் முதல்வர் வரை பிரபலமானவரா?

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகுமா என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில் தற்போது இந்த சீசனின் புதிய நடுவர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.