'டான்' படத்தில் இணைந்த மேலும் இரண்டு பிரபலங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,February 03 2021]

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ‘டான்’ குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில் இன்று இந்த திரைப்படத்தில் நடிக்க முக்கிய பிரபலங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன.

முதலாவதாக இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் அதனை அடுத்து எஸ்ஜே சூர்யா இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

‘டான்’ திரைப்படத்தில் பிரபல தமிழ் நடிகர் சமுத்திரக்கனி மற்றும் நகைச்சுவை நடிகர் சூரி ஆகிய இருவரும் இணைந்துள்ளனர் என்று சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் யாரெல்லாம் இந்த படத்தில் இணைய உள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

More News

'மாநாடு' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது ஒன்று தான் காரணம்: சிம்பு

சமூகத்தில் இஸ்லாமியர்களுக்கு என ஒரு பார்வை உள்ளது. அந்த பார்வையை மாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை இந்த 'மாநாடு' படம் கொடுத்ததால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்

சூரி ஹீரோவாகும் படத்தில் நானும் நடிப்பது சந்தோஷம்: விஜய்சேதுபதி

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பது எனக்கு மிகவும் சந்தோசம் என்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூறியுள்ளார் 

சிவகார்த்திகேயனின் 'டான்' பட நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் டைட்டில் 'டான்' என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

உண்மையான 'மாஸ்டர்' இவர்தான்: நடராஜன் டுவீட்

உண்மையான மாஸ்டர் இவர்தான் என தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் புகழ் நடராஜன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சர்ச்சைக்குரிய பிக்பாஸ் போட்டியாளர் கொரோனாவால் மரணம்!

சர்ச்சைக்குரிய பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் அவர் காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன