2ஆம் பாகமாகும் சசிகுமார்-சமுத்திரக்கனியின் வெற்றிப்படம்

  • IndiaGlitz, [Tuesday,January 09 2018]

திரையுலக நண்பர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கி வரும் சமுத்திரக்கனி-சசிகுமார் இணைந்து பணியாற்றிய 'சுப்பிரமணியபுரம், 'நாடோடிகள்', போராளி, 'ஈசன்', போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் மீண்டும் இந்த நண்பர்கள் ஒரு படத்தில் இணையவுள்ளனர்.

இந்த படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த 'நாடோடிகள்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகுமார் தயாரித்து இயக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சசிகுமார் தற்போது முத்தையாபாண்டியன் இயக்கும் 'அசுரவதம்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் குட்டிப்புலி' இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

More News

திருடனை திட்டினால் தவறா? சித்தார்த்

நேற்று நடிகர் சித்தார்த் ஆன்லைன் பைரசியை ஆதரவு தெரிவித்த ஒரு ரசிகரை தனது டுவிட்டரில் திட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 'அவள்' படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் பார்த்து கொள்கிறோம்

ஆதார் குறித்து இன்னொரு அதிர்ச்சி தகவல்

ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்கள் பாதுகாப்பாக இல்லை என்றும், ரூ.500 கொடுத்தால் ஆதார் அட்டையில் உள்ள விபரங்கள் தெரிவிக்கப்படும் மற்றும் மாற்றப்படும்

'மன்னார் வகையறா' சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்கள்

கடந்த 2016ஆம் ஆண்டு விமல் நடித்த 'மாப்பிள்ளை சிங்கம்' படத்திற்கு பின்னர் அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் விமல் படம் வெளியாகாத ஆண்டு 2017 மட்டுமே.

வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்: எச்.ராஜா

எச்.ராஜா கடந்த சில மாதங்களில் ரஜினி, கமல், விஜய், விஷால் என திரையுலக பிரமுகர்களை அடுத்தடுத்து விமர்சித்து வந்த நிலையில் தற்போது அவருடைய பார்வை கவியரசு வைரமுத்துவின் மீது விழுந்துள்ளது.

தளபதி விஜய் இப்போது எங்கே இருக்கின்றார் தெரியுமா?

தளபதி விஜய் சமீபத்தில் குடும்பத்துடன் லண்டன் சென்ற நிலையில் தற்போது லண்டனில் இருந்து அவர் குடும்பத்துடன் சீனாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.