சமந்தாவின் முதல் முயற்சி

  • IndiaGlitz, [Thursday,May 12 2016]

'சமந்தா' நடித்த 'தெறி மற்றும் '24' ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப்படமாகி உள்ளதால் உற்சாகமாக இருக்கும் அவர் அடுத்த படத்தில் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமந்தா சமீபத்தில் பெங்களூர் சென்றபோது இயக்குனர் பவண்குமார் இயக்கிய கன்னட திரைப்படமான 'யூ டர்ன்' என்ற படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துள்ளார். இந்த படத்தை பார்த்தவுடன் மிகவும் இம்ப்ரஸ் ஆன அவர் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் சமந்தா இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸ்ட் ஆக நடிக்கவுள்ளார். சமந்தா முதல்முறையாக பத்திரிகையாளர் கேரக்டரை ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னடத்தில் இயக்கிய பவண்குமாரே இந்த படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் படங்களையும் இயக்குவார் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'லூசியா' என்ற படத்தை இயக்கியவர் என்பது அனைவரும் அறிந்ததே...