சமந்தாவின் 'யசோதா' படத்தின் முக்கிய தகவல்!

  • IndiaGlitz, [Thursday,January 06 2022]

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது ’யசோதா’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’யசோதா’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ’யசோதா’ திரைப்படத்தை கிருஷ்ண பிரசாத் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவுடன் வரலட்சுமி, உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் என்பதும் மணிசர்மா இசையமைத்து வரும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமந்தாவின் திரையுலக வாழ்வில் இந்த படம் மிக முக்கிய படமாக இருக்கும் என்றும் திருப்புமுனையாக அமையும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

'ஊ சொல்றியா, ஊஊ சொல்றியா' பாடல்: சமந்தாவின் ரிகர்சல் வீடியோ!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மிகப் பெரிய

பிரபல பாடலாசிரியர் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல்!

பிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் நேற்று காலமான நிலையில் அவரது மறைவிற்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார் 

விநாயகர் ஓவியத்தின் முன் 'மணி ஹெய்ஸ்ட்' பிரபலம்: வைரல் புகைப்படம்!

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான 'மணி ஹெய்ஸ்ட்' என்ற தொடர் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்பதும் உலகம் முழுவதும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பாளருடன் இணைந்தது சிம்புவின் 'மாநாடு'

சிவகார்த்திகேயன் படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் சிம்புவின் 'மாநாடு' படத்தின் ரீமேக் உரிமையை பெற்று இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணப்பெட்டியை எடுத்தது ஏன்? சிபி கூறும் காரணம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 95வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் இறுதிப் போட்டிக்குச் செல்லும் நான்கு போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு