அமைதியுடன் நம்பிக்கையாக இருங்கள்: 'தி பேமிலிமேன் 2' சர்ச்சைக்கு இடையே சமந்தாவின் பதிவு!

  • IndiaGlitz, [Friday,May 21 2021]

பிரபல நடிகை சமந்தா நடித்த வெப் தொடர் ‘தி பேமிலிமேன் 2’. இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தொடரின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலர் மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தாலும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடரை வெளியிடக்கூடாது என பல அரசியல் இயக்கங்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இந்தத் வெப்தொடரை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் ’அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று பதிவு செய்து மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான ’முழுப்பாதையும் தென்படாவிட்டாலும் முதலடியை எடுத்து வைப்பதற்கு நம்பிக்கையே முக்கியம்’ என்பதையும் பதிவு செய்துள்ளார். தி பேமிலிமேன் 2’ தொடரின் சர்ச்சைக்கு மத்தியில் சமந்தாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 

More News

தமிழக அரசின் கொரோனா நடவடிக்கைக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி: வீடியோ வைரல்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற தமிழக அரசு போராடி வருகிறது

கருப்பு பூஞ்சையை காட்டிலும் கடுமையாக தாக்கும் வெள்ளை பூஞ்சை தொற்று...! பீகாரில் பரவல்....!

கொரோனா உலகையே உலுக்கி வரும் நிலையில், தற்போது வெள்ளை பூஞ்சை தொற்று என்ற நோய்  புதிதாக பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமந்தா படக்குழுவினர்களை எச்சரித்த 'நாம் தமிழர் கட்சி' சீமான்!

சமந்தா நடித்த 'தி ஃபேமிலிமேன் 2' என்ற வெப்தொடர் வரும் ஜூன் 4ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் நிலையில் அந்த தொடரை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்

ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்: வைரலாகும் ரஜினி-மோகன்பாபு புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபு ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குடும்ப அளவில் இரு குடும்பத்தினர் மிகவும் நெருக்கமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஜெயம் ரவி பட நாயகிக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

ஜெயம் ரவி நடித்த படத்தின் நாயகிக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்