சமந்தாவின் அழகுக்கு பிரபல பாடகி காரணமா?

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

சமீப காலங்களில் திருமணத்திற்கும் பின்னரும் வெற்றி படங்களை கொடுத்து வரும் ஒரே நடிகை சமந்தாதான். திருமணத்திற்கு பின்னர் அவரது நடிப்பில் வெளியான 'ரங்கஸ்தலம்', 'நடிகையர் திலகம்' மற்றும் 'இரும்புத்திரை' ஆகிய மூன்று படங்களும் வெற்றி பெற்றன. அதேபோல் அடுத்த மாதம் வெளியாகவுள்ள 'சீமராஜா' மற்றும் 'யூடர்ன்' ஆகிய படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் நடிகை சமந்தா, பிரபல பாடகி சின்மயிக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் சமந்தா ஒரு பெட்டியை திறக்கின்றார். அந்த பெட்டியில் சமந்தாவின் ஸ்கின்னை பாதுகாக்கும் பிரத்யேக அழகு சாதன பொருட்கள் உள்ளன. இந்த அழகு சாதனங்களை சின்மயி தான் சமந்தாவுக்கு அனுப்பியுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து சமந்தா இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சமந்தாவுக்கு ஏற்கனவே ஸ்கின் பிரச்சனை கடந்த சில வருடங்களுக்கு முன் இருந்த நிலையில் அவரது ஸ்கின்னை பாதுகாக்கும் வகையில் அழகு சாதனங்களை சின்மயி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்மயி ஏற்கனவே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பல பியூட்டி டிப்ஸ்களை வெளியிட்டு வருபவர் என்பது தெரிந்ததே.

More News

விஜய்-அட்லி படத்தில் 'தல' கனெக்சன்

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இம்மாதத்திற்குள் முடித்துவிடுவார்

ஹன்சிகாவின் 50வது பட டைட்டில் குறித்த அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா, பிரபுதேவா இயக்கிய 'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அருண்விஜய்யின் 'தடம்' சென்சார் தகவல்கள்

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான அருண்விஜய், பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் அவருக்கு திருப்பத்தை தந்த படம் அஜித்தின் 'என்னை அறிந்தால்' என்ற படம் தான்.

வருமான வரித்துறை அலுவலகராக மாறிய 'குப்பைத்தொட்டி' இளம்பெண்

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் அசாம் மாநிலத்தில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் ஒருவர் குப்பைத்தொட்டியில் ஒரு அழகான பெண் குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டார்.

திமுக தலைவர் கருணாநிதி கவலைக்கிடம்: தொண்டர்கள் அதிர்ச்சி

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பத்து தினங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக நேற்று வரை தலைவர்கள் கூறிவந்தனர்.