வீட்டுக்கு செல்லவே விருப்பம் இல்லை : சமந்தா

  • IndiaGlitz, [Friday,January 01 2016]

இளையதளபதி விஜய்யுடன் 'தெறி', சூர்யாவுடன் '24', மகேஷ்பாபுவுடன் 'பிரம்மோத்சவம்', என ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தா, 2016ஆம் ஆண்டின் பிசியான நடிகைகளில் ஒருவர். நடிப்பு மட்டுமின்றி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் சமூக சேவைகளையும் சமந்தா செய்து வருகிறார்.


இந்நிலையில் தனது பிசியான பணிகள் குறித்து சமந்தா கூறியபோது, 'எப்போதும் பிசியாக இருப்பது எனக்கு பிடித்த ஒன்று. வேலையில்லாமல் வீட்டில் சும்மா இருந்தால்தான் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். சினிமா மீதான என்னுடைய காதலுக்கு எல்லையே இல்லை. எனக்கு எப்போதும் படப்பிடிப்பில் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் படப்பிடிப்பு தளத்தை விட்டு வீட்டுக்கு செல்லவே பிடிக்கவில்லை. சினிமா என்பது எனது தொழில் அல்ல, அது என் வாழ்க்கை' என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த உலகத்தில் என்னைவிட மிக அழகான பெண்கள் எவ்வளவோ பேர் இருக்கும் நிலையில் கடவுள் எனக்கு கதாநாயகி என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளார். அந்த அந்தஸ்தை நான் காப்பாற்றி கொள்வேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

சூர்யாவின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா அமலாபால்?

பாண்டியராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'பசங்க -2' திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

மரியான் பாடலை மழைக்காக மாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்

தனுஷ் நடித்த 'மரியான்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஒரு பாடலின் வரியை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த பாடலின் வரிகள்...

திரைவிமர்சனம் 'மாலை நேரத்து மயக்கம் : மயங்க வைக்கும் காதல்

பிரபல இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்ட கீதாஞ்சலி இயக்கிய முதல் படம்தான் 'மாலை நேரத்து இயக்கம்'. முதல்படமே அதுவும் ஒரு பெண் இயக்குனரின் படம் சென்சாரில்...

'கதகளி' கதை யாருடையது? பாண்டியராஜ் விளக்கம்

பாண்டியராஜ் இயக்கிய 'பசங்க -2' திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்...

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு?'

10 எண்றதுக்குள்ள' படத்தை அடுத்து விக்ரம் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். 'அரிமாநம்பி' ...