குழந்தைகள் விஷயத்தில் சமந்தா எடுத்த அதிரடி முடிவு? குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Sunday,November 26 2023]

நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்து விட்ட நிலையில் தற்போது அவர் குழந்தைகள் விஷயத்தில் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்தவுடன் தற்போது அவர் மயோசிட்டிஸ் என்ற நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் மறுமணம் செய்து கொள்வார் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இப்போது அவர் பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

எனவே சமந்தா மறுமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்காக வாழ திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த ’குஷி’ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் தனது உடல் முழுமையாக குணமாகிய உடன் அமெரிக்க திரைப்படமான ’சென்னை ஸ்டோரிஸ்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில திரைப்பட வாய்ப்புகளை அவர் தற்காலிகமாக தவிர்த்து விட்ட நிலையில் முழு குணமானவுடன் மீண்டும் திரையுலகில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'அயலான்' ரிலீஸ் மட்டுமல்ல, இன்னொன்றும்: ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் தரும் டபுள் ட்ரீட்..

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தினத்தில் அவர் நடித்து வரும்

4 பெண் இயக்குனர்களுடன் இணையும் பா ரஞ்சித்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

4 பெண் இயக்குனர்களுடன் இயக்குனர் பா. ரஞ்சித் இணையும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது

பிக்பாஸ் போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த விஜய் வர்மா.. இனி ஆட்டம் சூடு பிடிக்குமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் திடீர் திருப்பமாக எவிக்சன் ஆன எக்ஸ் எக்ஸ் போட்டியாளர்கள் மீண்டும் ரீஎண்ட்ரி தருவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் காதல் – தி கோர் ஜோதிகாவை பாராட்டிய பிரபல நடிகை..!

பிரபல மலையாள நடிகர் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த   “காதல் – தி கோர்” என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜோதிகாவின்

வனிதா தாக்கப்பட்ட விவகாரம்.. தாமாக முன்வந்து விசாரிக்கும் காவல்துறை..

நடிகை வனிதா நேற்று நள்ளிரவு மர்ம நபர்களால் தாக்கப்பட்டார் என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில் தன்னை தாக்கியவர் பிரதீப் ஆதரவாளராக இருக்கலாம் என்று கூறியிருந்தார்.