தனுஷ், விக்ரம்குமாருடன் 3வது முறையாக இணையும் சமந்தா

  • IndiaGlitz, [Saturday,December 19 2015]

கோலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவரான சமந்தா, தனுஷுடன் நடித்த 'தங்கமகன்' நேற்று வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனுஷூடன் மீண்டும் இரண்டு படங்களில் சமந்தா ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே நாம் அறிந்ததே

'தங்கமகன்' படத்தை அடுத்து தனுஷ் நடிக்கவுள்ள 'வடசென்னை' மற்றும் 'செல்வராகவன் இயக்கும் படம்' என இரண்டு படங்களில் தனுஷூடன் மீண்டும் சமந்தா ஜோடி சேரவுள்ளார். தனுஷூடன் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் சமந்தா, இதேபோல் விக்ரம்குமார் இயக்கும் படத்திலும் மூன்றாவது முறையாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.


ஏற்கனவே விக்ரம்குமார் இயக்கத்தில் 'மனம்' மற்றும் '24' ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, விக்ரம்குமாரின் அடுத்த படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர சமந்தா தற்போது விஜய்யின் 'தெறி', மகேஷ்பாபுவின் பிரம்மோத்சவம்', த்ரிவிக்ரம் இயக்கும் 'A Aa' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.