நீண்ட இடைவெளிக்கு பின் அடுத்த பட அப்டேட் கொடுத்த சமந்தா.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Wednesday,January 31 2024]

நடிகை சமந்தாவுக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் தாக்கிய நிலையில் அவர் திரையுலகில் இருந்து சில காலம் விலகி இருப்பதாக அறிவித்திருந்தார். முற்றிலும் அவை சிகிச்சை எடுத்துக் கொண்டு உலகின் சில நாடுகளை சுற்றி வந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அவர் உடல் நலம் தேறி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும் அடுத்த கட்டமாக படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமந்தா நடிப்பில் உருவாகி வந்த ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி விட்டதாக தெரிகிறது. ’தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் இந்த தொடர், பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் நடித்து வந்த தொடரின் இந்திய வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா, வருண் தவான், சிக்கந்தர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்றை சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து ’கடைசியாக நாங்கள் சிலவற்றை பார்த்தோம், அது எங்களுக்கு மிகவும் பிடித்தது’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் இயக்குனர்கள் ராஜ், டிகே, சமந்தா, வருண் தவான் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சன்னி லியோன் தலையில் மாறி மாறி அடிக்கும் 5 பேர்.. என்ன விளையாட்டு இது!

நடிகை சன்னி லியோன் நாற்காலியில் ஹெல்மெட் அணிந்து உட்கார்ந்து இருக்கும் நிலையில் அவரை பின்புறம் உள்ள ஐந்து நபர்கள் மாறி மாறி அவரது தலையில் அடிக்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

கைவசம் 3 பாலிவுட் படங்கள்.. இந்தி திரையுலகில் பிசியாகும் ஜோதிகா..!

நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகி இருந்த நிலையில், அதன் பின்னர் '36 வயதிலேயே' என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். அ

வெள்ளியங்கிரியில் 'எல்.ஐ.சி' படப்பிடிப்பு.. சீமான் - ஜக்கி வாசுதேவ் சந்திப்பு நடக்குமா?

இதுவரை எந்த திரைப்படத்திற்கும் அனுமதி வழங்காத வெள்ளியங்கிரி ஈஷா தியான மையம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'எல்.ஐ.சி' படத்திற்காக அனுமதி வழங்கியிருப்பது

ரூ.90 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் ஆர்யா.. திருப்புமுனையை ஏற்படுத்துமா?

ஆர்யா நடித்த 'சார்பட்டா பரம்பரை' என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் 90 கோடி ரூபாய் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'தக்ஃலைப்' முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு.. அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த நாட்டிலா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்ஃலைப்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் தற்போது