இந்த வாரம் முழுவதும் கேரட் தான்: சமந்தாவின் வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Tuesday,August 25 2020]

திருமணத்திற்கு பின்னரும் தமிழ் தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா, இந்த கொரோனா விடுமுறையில் மற்ற நடிகைகளைப் போல் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து தனக்கு தானே விளம்பரம் தேடாமல், உருப்படியான விஷயத்தை செய்து வருகிறார்.

தனது வீட்டின் மொட்டை மாடியில் இயற்கை விவசாயம் செய்து வரும் சமந்தா அதுகுறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டார் என்பதும் அவரது இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தா தன்னுடைய முயற்சியால் விளைந்த செடிகளில் உள்ள கேரட்டுகளுடன் கூடிய ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். கொத்துக் கொத்தாக கேரட் காய்த்துள்ள செடிகளை கையில் வைத்திருக்கும் சமந்தாவின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் இந்த வாரம் முழுவதும் கேரட் தான் எங்கள் வீட்டின் மெனு என்று கூறியுள்ளார். அதாவது கேரட் ஜூஸ், கேரட் பச்சடி, கேரட் அல்வா, கேரட் பக்கோடா, கேரட் ப்ரை, கேரட் இட்லி, கேரட் சமோசா என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களை அள்ளிவீசி வருகின்றனர்.

More News

வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி' ஓடிடியில் ரிலீஸா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் உருவான திரைப்படம் 'பார்ட்டி'. இந்த திரைப்படம் பல மாதங்களுக்கு முன்பே வெளியாக இருந்த நிலையில்

கொரோனாவுக்கு மூன்றே மூன்று தீர்வுகள்: வைரமுத்து

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த ஒரு வருடம் மட்டுமே வேண்டவே  வேண்டாம்: ஜெயம் ரவி வேண்டுகோள்

இந்த வருடம் மட்டும் தனது பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என நடிகர் ஜெயம் ரவி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாஜகவில் இணையும் ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர்?  பரபரப்பு தகவல்

ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என பரபரப்பாக பேசப்பட்டவர் திடீரென இன்று பாஜகவில் இணைவதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கறுப்பினத்தவரை பின்னால் இருந்து பலமுறை சுட்ட போலீஸ்!!! US இல் வெடிக்கும் அடுத்த சர்ச்சை!!!

அமெரிக்காவில் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் போலீஸார் பிடியில் சிக்கி உயிரிழந்தார்.