நடிகை சமந்தாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Friday,September 06 2024]

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் சமந்தாவுக்கு என்ன ஆச்சு என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பதும் வருண் தவான் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த தொடரில் சமந்தா ஆக்ஷன் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் மருத்துவமனையில் முழங்கால் வலிக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில் அவர் ’காயங்கள் இல்லாமல் ஆக்சன் நாயகியாக முடியாதா’ என்று அவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தின் போது சமந்தாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து சமந்தா விரைவில் குணமாக வேண்டும் என்று அவர் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் சமந்தா முழுமையாக குணமாகி டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றும் அதன் பிறகு மீண்டும் அவர் ’சிட்டாடல்’ வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதிக்கு சம்பளம் எவ்வளவு? திரைப்படத்தை விட 3 மடங்கா?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதிக்கு சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் கசிந்துள்ள நிலையில் அவர் திரைப்படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட

தங்கை திருமணத்தில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்... சாய் பல்லவியின் வைரல் வீடியோ..!

நடிகை சாய் பல்லவி சகோதரிக்கு நேற்று திருமணம் நடந்த நிலையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் இந்த திருமண விழா நடந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மீண்டும் ரீ என்ட்ரி ஆகும் 'கிழக்கு சீமையிலே' நடிகை அஸ்வினி.. எதில் தெரியுமா?

பாரதிராஜா இயக்கத்தில், நெப்போலியன், விஜயகுமார், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்த 'கிழக்கு சீமையிலே' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை பல ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆக இருப்பதாக

'வாழை' படத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்.. விபத்து நடந்த அன்று நடந்தது என்ன?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை' திரைப்படம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த விபத்து ஒன்றின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக

'விடுதலை 2' ரன்னிங் டைம் 4 மணி நேரமா? வெற்றிமாறனின் வித்தியாசமான திட்டம்..!

'விடுதலை 2' திரைப்படத்தின் ரன்னிங் டைம் நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக இருப்பதால் வெற்றிமாறன் வித்தியாசமான திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.