வெள்ள நிவாரண நிதி. சமந்தா கொடுத்த ரூ.30 லட்சம்

  • IndiaGlitz, [Saturday,December 12 2015]

கடந்த வாரம் சென்னை, கடலூர் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டோர்களுக்கு உதவிடும் வகையில் கோலிவுட் திரையுலகினர் கொடுத்த நிதியுதவி பலகோடிகளை தாண்டியுள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.

இந்த நிதியுதவியை நடிகர்கள் மட்டுமின்றி நடிகைகளும் தாராளமாக கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே ஹன்சிகா ரூ.15 லட்சமும், ஸ்ரீதிவ்யா ரூ.10 லட்சமும் வெள்ள நிவாரண நிதியாக கொடுத்துள்ள நிலையில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூ.30 லட்சம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வெள்ள நிவாரண நிதி கொடுப்பதில் மற்ற தொண்டு நிறுவனங்களுக்கும் தொழிலதிபர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை தமிழ் திரைப்பட பிரபலங்கள் நிரூபித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.