கணவரை பிரிஞ்ச உங்களோட அறிவுரை தேவையில்லை.. ரசிகரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த சமந்தா..!

  • IndiaGlitz, [Saturday,February 17 2024]

கணவரை பிரிந்து வாழும் உங்களுடைய அறிவுரை எங்களுக்கு தேவையில்லை என ரசிகர் ஒருவர் கூறியதற்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சமந்தா தற்போது மீண்டும் ஆக்டிவாகிவிட்ட நிலையில் ஒரு சிறு ஓய்வுக்கு பின் அவர் மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி வரும் சமந்தா, ரசிகர்களின் சுவாரசியமான கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.

அந்த வகையில் ரசிகர்களுடன் சமீபத்தில் அவர் உரையாடியபோது ’நீங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பெரிய விஷயம் என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்த சமந்தா, ‘என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை எல்லாம் அறியாமல் இருந்தது தான் என்னுடைய வாழ்வில் நான் மிகப்பெரிய செய்த மிகப்பெரிய தவறு, அப்போது எனக்கு இருந்த துணையால் விருப்பு வெறுப்புகள் என்னை மறைமுகமாக பாதித்தது’ என்று தெரிவித்திருந்தார்.



இந்த பதிலுக்கு ரசிகர் ஒருவர் ‘நீங்கள் ஏன் உங்கள் கணவரை விட்டு பிரிந்தீர்கள்? வாழ்க்கையில் தோல்வி அடைந்த ஒருவரிடம் இருந்து எனக்கு அறிவுரை தேவையில்லை’ என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சமந்தா ’இந்த அளவுக்கு வெறுப்பை உங்களிடம் உருவாக்கும் நோயிலிருந்து நீங்கள் குணமடைவீர்கள் நான் நம்புகிறேன், வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார். சமந்தாவின் இந்த பதிலடி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

More News

பவானி ஆறு சர்ச்சையை மறுத்த போலீசார்.. புது விளக்கம் அளித்துள்ள பாக்யராஜ்..!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர், இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்ட வீடியோவில் பவானி ஆற்றில் குளிக்க செல்லும் சில சுற்றுலா பயணிகளை அங்குள்ள சிலர் வேண்டுமென்றே தண்ணீரில் மூழ்கடித்து

90s கிட்ஸ்களை கவர்ந்த விளம்பர நடிகை.. புற்றுநோயால் பரிதாப மரணம்..!

கடந்த 90களில் சர்ப் எக்ஸெல் என்ற விளம்பரத்தின் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகை புற்றுநோயால் காலமானதை அடுத்து ரசிகர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரையில் தான் வில்லன்.. நிஜத்தில் ஹீரோவான 'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர்..!

திரையில் வில்லனாக நடித்த நம்பியார் முதல் பல நடிகர்கள் நிஜத்தில் ஹீரோவாகி செய்த சாதனைகள் பலர் அறிந்தது. அந்த வகையில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த குக் வித் கோமாளி

130 ஆண்டுகள் பயணம் பிரமிக்க வைக்கிறது.. சூர்யாவிடம் பாராட்டு பெற்ற பிரபலம் யார் தெரியுமா?

நீரதிகாரம் என்ற நாவலை எழுதிய நாவலாசிரியர் வெண்ணிலா என்பவருக்கு நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜியை கைவிட்டதா திமுக: பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பதில்

செந்தில் பாலாஜியை திமுக கைவிட்டதா என கேட்கப்பட்ட கேள்விக்கு "தற்போது வரை இல்லை" என பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பதில் அளித்துள்ளார்.