இரண்டாவது முறையாக இணையும் சமந்தா-நித்யாமேனன்

  • IndiaGlitz, [Saturday,January 30 2016]

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தாலும் நடிகை சமந்தா சமீபகாலமாக இரண்டு ஹீரோயின்கள் படங்களில் தயங்காமல் நடித்து வருகிறார். எமிஜாக்சனுடன் தங்கமகன், தெறி ஆகிய இரண்டு படங்களில் நடித்த சமந்தா தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஓகே கண்மணி' நாயகி நித்யாமேனனுடன் இணைந்து நடிக்க தயாராகி வருகிறார். ஏற்கனவே இருவரும் சூர்யாவின் '24' படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ள அடுத்த படம் 'ஜனதா கேரேஜ்'. இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தின் நாயகியாக ஏற்கனவே சமந்தா ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் இன்னொரு நாயகி வேடத்தில் நடிக்க நித்யா மேனனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் நித்யாமேனன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.