ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா - நாக சைதன்யா.. இருவரும் பேசிக்கொண்டார்களா?

  • IndiaGlitz, [Wednesday,March 20 2024]

நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவை கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில் மூன்று வருடம் கழித்து இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். விவாகரத்துக்கு பின் இருவரும் சந்திக்கவில்லை, பேசவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அமேசான் பிரைம் வீடியோ சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாகசைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமந்தா தற்போது ’சிட்டாடல் ஹனி ஃபன்னி’ என்ற வெப் சீரியலில் நடித்து வரும் நிலையில் அமேசான் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அதேபோல் நாக சைதன்யாவும் தெலுங்கில் ’தூதா’ என்ற வெப் தொடரில் நடித்திருந்த நிலையில் அதன் வெற்றி விழாவில் கலந்து கொண்டார்.

இந்த இரு நிகழ்ச்சிகளும், ஒரே இடத்தில் நடந்ததால் த சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் தனித்தனியாக இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளவில்லை என்றும் பேசிக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

More News

காச தவிர எல்லாமே சம்பாதிச்சு இருக்கேன்.. பிக்பாஸ் பிரதீப்பின் உருக்கமான பதிவு..!

காச தவிர எல்லாமே சம்பாதித்து வைத்திருக்கிறேன் என பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் அந்தோணி தனது சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளதை அடுத்து

2 பயோபிக் படத்தில் நடிக்க ஆசை.. ஒன்னு இளையராஜா.. இன்னொன்னு.. தனுஷ் கூறிய தகவல்..!

நான் என்னுடைய வாழ்க்கையில் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், அதில் ஒன்று இசைஞானி இளையராஜா, இன்னொன்று யார் என்பதை தனுஷ் தெரிவித்த

ஆர்மோனிய பெட்டியுடன் சென்னை வந்த இசைஞானி: 'இளையராஜா' பர்ஸ்ட் லுக் போஸ்டர்..

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் ஏற்கனவே வெளியான தகவலை பார்த்தோம்.

'ரோலக்ஸ்' படம் குறித்து சூப்பர் அப்டேட்டை தெரிவித்த சூர்யா.. ரசிகர்கள் செம்ம குஷி..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் 'ரோலக்ஸ்' என்ற கேரக்டரில் சூர்யா தோன்றினார் என்பதும் அந்த கேரக்டரில் அவர் நடிப்பில் மிரட்டிய

ரூ.400 கோடி வசூலித்த படத்தின் 2ஆம் பாகத்தில் ருக்மணி வசந்த்.. கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷடம்..!

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி ரூ.400 கோடி வசூல் செய்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை ருக்மணி வசந்த் நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.