நயன்தாரா நடித்த முக்கிய கேரக்டரில் சமந்தா?

  • IndiaGlitz, [Saturday,September 19 2020]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ’மாயா’ மற்றும் டாப்ஸி நடித்த ’கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் அடுத்த படத்தில் சமந்தா நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் சமந்தா நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் கசிந்துள்ளது. முதல்முறையாக இந்த படத்தில் சமந்தா மாற்றுத்திறனாளியாக நடித்து வருவதாககூறப்படுகிறது. காது கேட்காத மாற்றுத்திறனாளியாக சமந்தா இந்த படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தின் கேரக்டருக்காக சமந்தா ஆன்லைன் மூலம் பயிற்சி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. 'நானும் ரெளடிதான்’ படத்தில் நயன்தாரா காது கேட்காத மாற்றுத்திறனாளியாக நடித்திருந்த நிலையில் தற்போது சமந்தாவும் அதேபோன்ற கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகவிருக்கும் இந்த படத்தை சோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் இந்த படத்திற்காக ராமோஜிராஜ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் போடப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது