காவிரி பிரச்சனை குறித்து சாம் பில்லிங்ஸ் பதிவு செய்த டுவீட்

  • IndiaGlitz, [Thursday,April 12 2018]

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த ஒருசில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியதால் வேறு வழியின்றி ஐபிஎல் நிர்வாகம் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற முடிவு செய்தது. இந்த முடிவு சென்னை ரசிகர்களை மட்டுமின்றி சென்னை அணியில் உள்ள வீரர்களையும் மனவருத்தமடைய செய்துள்ளது. குறிப்பாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக  விளையாடிய சிஎஸ்கே வீரர் சாம் பில்லிங்ஸ் மிகுந்த வருத்தத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:

சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து நாங்கள் வெளியேறும் நிலை எங்களுக்கு நம்ப முடியாததாக உள்ளது. சென்னை போட்டியை பார்க்க வந்த ரசிகர் காயம் அடைந்தது என் மனதை வேதனை அடைய செயுதுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் விரைவில் குணமடையவும், காவிர் பிரச்சனை விரைவில் தீரவும் விரும்புகிறேன். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள்' என்று கூறியுள்ளார்.

பில்லிங்ஸ் பதிவு செய்த இந்த கருத்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். நீங்கள் எந்த மைதானத்தில் விளையாடினாலும், எங்களது உணர்வுபூர்வமான ஆதரவு எப்போதும் தல தோனி தலைமையிலான உங்கள் அணிக்கு உண்டு என்று பலர் கமெண்ட் அளித்துள்ளனர்.