கொலை மிரட்டல் எதிரொலி… சல்லுபாய் வாங்கிய புல்லட் ப்ரூப் காரின் விலை என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,April 08 2023]

பிரபல நடிகர் சல்மான் கானுக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் மற்றும் மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் வந்ததாகத் தகவல் வெளியாகின. இதையடுத்து அவர் குண்டு துளைக்காத புதிய கார் ஒன்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்திய அளவில் மிகவும் வரவேற்பு பெற்ற நடிகராக இருந்துவரும் சல்மான் கானுக்கு சமீபத்தில் கேங்ஸடர் குழு ஒன்றில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகின. இதையடுத்து அவருக்கு மும்பை காவல் பிரிவில் இருந்து Y+ பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தன்னுடைய மெய்க்காவலர்களையும் அவர் அதிகப்படுத்தியுள்ளார். இதைத்தவிர அருடைய வீட்டில் எப்போதும் பலத்த காவலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கு நிலையில் அவர் காவல் துறையின் அனுமதிப்பெற்று துப்பாக்கி லைசென்ஸையும் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படி தனக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் காரணமாக சல்மான் கான் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் துபாயில் இருந்து நிசான் பெட்ரோல் எஸ்யூவி ரக காரை அவர் இறக்குமதி செய்துள்ளதாகவும் இந்தக் காரானது கடினமான நேரங்களிலும் குண்டு துளைக்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிசான் பெட்ரோல் எஸ்யூவி எனப்படும் இந்தக் காரானது வெளிநாட்டில் 45-88 லட்சம் வரை இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் இறக்குமதி வரியையும் சேர்ந்து இந்தக் காருக்கு ஒரு கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று ரசிகர்கள் கணித்து வருகின்றனர். இந்த வகை கார் இந்தியாவில் கிடைப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த வாரம் மும்பை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் சல்மான் கான் தனது புதிய எஸ்யூவி காரில் வந்திருந்தார். இதனால் அந்தக் காரின் புகைப்படம் தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகர் சல்மான் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான “பதான்” படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது “கிசி கா பாய் கிசி கி ஜான்” படத்திலும் “டைகர் 3” படத்திலும் இணைந்து நடித்துவருகிறார்.