திருப்பூர் கேரம்போர்டை அடுத்து சேலத்தில் நடந்த ட்ரோன் காமெடி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை ஒரு சிலர் மதிக்காமல் வெளியில் சென்று விளையாடிக்கொண்டு இருப்பதை போலீசார் ட்ரோன் மூலம் கண்டுபிடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட திருப்பூர் மாநகர போலீசார் மரத்தினடியில் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்த சிலரை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து அவர்களை விரட்டியடித்தனர் என்ற காமெடி வீடியோவை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது கேரம் போர்டை அடுத்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை ட்ரோன் மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சேலம் பகுதியில் ஒரு மைதானத்தில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென ட்ரோன் வந்ததை பார்த்து அதிர்ந்த சிறுவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக தலைதெறிக்க ஓடினர்.

இருப்பினும் ட்ரோன் அந்த சிறுவர்களை விடாமல் துரத்தியது. சிறுவர்கள் தங்கள் முகம் ட்ரோன் கேமிராவில் தெரியாமல் இருக்க உடுத்தியிருந்த கைலி, செடிகொடிகள், இலைகள் ஆகியவற்றை மறைத்து பார்த்தும் ட்ரோன் அவர்களை விடவில்லை. இதனையடுத்து ஒருசில சிறுவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சேலம் போலீசார் இதுகுறித்த வீடியோவை தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவிற்கு பொருத்தமான வடிவேலு காமெடி வசனத்தை இணைத்து வெளியிட்டுள்ளதால் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து இனிமேலாவது வெளியில் சுற்றாமல் வீட்டில் இருக்க வேண்டும் என போலீசார்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

More News

உங்கள் காதலி உங்களுக்காக காத்திருக்கிறாள்: வெளிநாட்டு தமிழர்களுக்கு ஆறுதல் கூறிய வைரமுத்து

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

திரும்பவுமா??? கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மறுபடியும் கொரோனா பாதிப்பு!!!

முன்னதாக ஒருவரது உடலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சையின் மூலம் கொரோனா வைரஸ்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டால் அவருக்கு மீண்டும் கொரோனா வருவதற்கான சாத்தியம்

பிரபல நடிகை ஆரம்பித்து வைத்த 'பில்லோ சேலஞ்ச்': வைரலாகும் புகைப்படங்கள்

உலகம் முழுவதும் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்ட் ஆவது வழக்கமான ஒன்றே. ஐஸ்கட்டி குளியல் சேலஞ்ச் முதல் பல சேலஞ்சுகள் இதுவரை டிரெண்ட் ஆகியுள்ள நிலையில்

அண்டை மாநிலத்தின் வெற்றியும் தமிழகத்தின் சுய விளம்பரமும்: கஸ்தூரி ஆவேச டுவீட்

இந்தியாவில் முதல் முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமான கேரளா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்தது.

ராகவா லாரன்ஸின் அடுத்த ரூ.25 லட்சம் நிதியுதவி: 

கொரோனா வைரஸ் காரணமாக முதல்கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும்