கூல் சுரேஷுக்கு கார் பரிசளித்த பிரியாணி கடை ஓனர்.. பாட்டு பாடி தெரிவித்த நன்றி..!

  • IndiaGlitz, [Wednesday,May 29 2024]

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான கூல் சுரேஷுக்கு சேலத்தைச் சேர்ந்த பிரியாணி கடை ஓனர் கார் பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சேலத்தைச் சேர்ந்த பிரபல பிரியாணி கடை ஓனர் ஒருவர் கூல் சுரேஷை அழைத்து புத்தம் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கூல் சுரேஷ் அவருடைய ஓட்டலுக்கு சென்று சாப்பிட்ட போது ஆட்டோவில் வந்ததாக கூறியிருந்தார். அப்போது உங்களுடைய கார் எங்கே என்று அவர் கேட்டதாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது சென்னையில் வெள்ளம் வந்தது, அப்போது என்னுடைய கார் போய்விட்டது என்று பதில் அளித்ததாகவும், தற்போது தன்னிடம் கார் இல்லை என்று கூறியதாகவும் கூல் சுரேஷ் தெரிவித்தார்.

இதனை அடுத்து அந்த பிரியாணி கடை ஓனர் இரண்டு நாள் கழித்து நான் போன் செய்கிறேன் வா என்று கூறியதாகவும், நான் கூட பிரியாணி சாப்பிட தான் கூப்பிடுகிறார் என்று நினைத்தேன், இங்கு வந்து பார்த்தால் ஒரு புத்தம் புதிய காரை என் முன் நிறுத்தி இது உன்னுடைய கார் தான் வைத்துக்கொள்’ என்று கூறினார். இதை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன்’ என்று கூல் சுரேஷ் தெரிவித்தார்.

இதனை அடுத்து ’அவர் அன்பை விதைக்கிறார் அது ஆலமரமான வளர்கிறது, பண்பை விதைக்கிறார் பலாப்பழம் போல் வளர்கிறது, நாம் எதை விதைக்கிறோமோ அதுதான் வளரும், ஐயா அவர்களுக்கு எனது நன்றி என்று கூறிய கூல் சுரேஷ் ’அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே’ என்ற பாட்டை பாடி நன்றி தெரிவித்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

எப்பவுமே ஒரு பயம் இருக்கும்.. ஆனா இப்ப அது இல்லை.. 'மழை பிடிக்காத மனிதன்' டீசர்..!

விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜனகராஜ்க்கு பிடிக்காத காதல் ஓவியம் படம்

காதல் ஓவியம் படத்தில் நான் ராதாவின் கணவனாக நடித்தேன் இந்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது வினுச்சக்கரவர்த்தியாம் ஆனால் இயக்குனர் பாரதிராஜா ஜனகராஜை நடிக்க வைத்து விட்டார்.

நயன்தாராவை இப்படி போட்டோ எடுக்க விக்கியால் மட்டுமே முடியும்.. வேற லெவல் போட்டோஷூட்..!

நடிகை நயன்தாரா சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் ஹாங்காங் சுற்றுப்பயணம் செய்த போது எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இவ்வளவு அழகாக நயன்தாராவை

பிரதீப் ரங்கநாதனை அடுத்து இன்னொரு ஹீரோவுடன் மமிதா பாஜூ.. நடிகராகும் இசையமைப்பாளர்..!

'பிரேமலு' என்ற மலையாள படத்தில் நடித்த நடிகை மமிதா பாஜூ, பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கும் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு

'சூர்யா 44' படத்தின் வில்லன் இந்த பிரபல ஹீரோவா? 2டி தயாரிப்பில் ஏற்கனவே நடித்தவர்..!

சூர்யா நடிக்க இருக்கும் 44வது திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் அந்தமானில் நடைபெற இருப்பதாகவும்