சீரியலில் மாமியார் - மருமகள்.. நிஜத்திலும் மாமியார் - மருமகள் ஆகும் ஆச்சரியம்..!

  • IndiaGlitz, [Thursday,May 16 2024]

சீரியலில் மாமியார் மருமகள் கேரக்டரில் நடித்து கொண்டிருக்கும் இரண்டு நடிகைகள் நிஜமாகவே மாமியார் மருமகள் ஆகப்போகும் ஆச்சரியம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சக்திவேல்’ என்ற சீரியலில் மாமியாராக ’மெட்டி ஒலி’ சீரியல் மூலம் பிரபலமான சாந்தி நடித்து வருகிறார். இதே அந்த சீரியலில் அவரது மருமகளாக சவுண்ட் சந்தியா என்பவர் நடித்து வருகிறார். மாமியார் மருமகள் கேரக்டரில் சாந்தி மற்றும் சந்தியா ஆகிய இருவரும் சூப்பராக நடித்து வரும் நிலையில் இவர்கள் நிஜமாகவே மாமியார் மருமகளாக ஆகப்போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

‘மெட்டிஒலி’ சாந்தியின் மகன் முரளி கிருஷ்ணனுக்கும் நடிகை சந்தியாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் திருமணம் ஆகப்போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

சவுண்ட் சந்தியா என்று கூறப்படும் நடிகை சந்தியா திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். பிகாம் பிஎல் எம்எல் பட்டதாரியான இவர் ’கண்மணி’ என்ற சீரியலில் நடிகையாக அறிமுகம் ஆகி அதன் பிறகு ’சத்யா’ ‘சுந்தரன் நீயும் சுந்தரன் நானும்’ ’நம்ம வீட்டு பொண்ணு’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர்.

இது முழுக்க முழுக்க ஒரு அரேஞ்ச் மேரேஜ் என்றும் திருமணத்திற்கு சின்னத்திரை உலகினர் பலர் வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அவரை போல் இன்னொருவர் இந்த உலகத்தில் தோன்ற முடியாது: ரஜினிகாந்த் வீடியோ வரைல்..!

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது என்பதும் டெல்லி சென்று அந்த விருதை அவருடைய மனைவி பிரேமலதா பெற்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

திடீரென வெளிநாட்டுக்கு கிளம்பிய ரஜினிகாந்த்.. எந்த நாடு? என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென வெளிநாட்டுக்கு கிளம்பி இருப்பதாகவும் அவர் எந்த நாட்டுக்கு சென்றார்? என்ன காரணத்துக்காக செல்கிறார்? என்ற விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு எந்த குளறுபடிகளும் இருக்க கூடாது.. ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு..!

கடந்த ஆண்டு தளபதி விஜய் கல்வி விருது விழா நடத்தி 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு வழங்கினார்

மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி.. சசிகுமாருக்கு ஒரு சக்சஸ் திரைப்படம் பார்சல்..!

கடந்த ஆண்டு சசிகுமார் நடித்த சூப்பர் ஹிட் படம் வெளியான நிலையில் அதே பட இயக்குனருடன் மீண்டும் சசிக்குமார் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு

இந்தியாவின் முதல் VFX இயக்குனர் நான் தான்: 1995ல் வெளியான படம் குறித்து 'கோட்' பட நடிகர்..!

இந்தியாவின் முதல் VFX இயக்குனர் நான்தான் என்று 'கோட்' படத்தில் நடித்த நடிகர் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான தனது படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.