ஒரே நேரத்தில் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் இளம் நடிகை

  • IndiaGlitz, [Thursday,March 29 2018]

'பிரேமம்' படம் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகை சாய்பல்லவி. இந்த படத்தின்  வெற்றியால் தனது டாக்டர் தொழிலை கூட கைவிட்டு முழுநேர நடிகையாகிவிட்டார். இவர் நடித்த முதல் தமிழ்ப்படமான 'கரு' திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் அதற்குள் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான சூர்யாவுடன் 'NGK'  படத்திலும்,  தனுஷுண்ட 'மாரி 2' படத்திலும் நடித்து வருகிறார்

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படத்திலும் சாய்பல்லவி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கிய சீமராஜா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன்பின்னர் ரவிகுமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் புதிய சயன்ஸ் பிக்சன் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ளார். இந்த படம் முடிந்த பின்னர் தான் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தில் தான் சாய்பல்லவி நாயகியாக நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வேலைநிறுத்தம் எப்போது முடியும்? விஷால் விளக்கம்

தமிழ் திரையுலகில் வரலாறு காணாத வகையில் ஒரு மாதம் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. புதிய படங்கள் ரிலீஸ் இல்லை முதல் போஸ்ட் புரடொக்சன்ஸ் நிறுத்தம் வரை

பூமராங் படத்திற்காக அதர்வா எடுத்த வித்தியாசமான முயற்சி

ஆர்.கண்ணன் மற்றும் அதர்வா இணைந்து உருவாக்கியுள்ள 'பூமராங்' திரைப்படத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தில் அதர்வா முதல்முறையாக மூன்று வெவ்வேறு விதமான தோற்றங்களில் நடித்துள்ளார்.

'நரகாசுரன்' படத்தில் இருந்து விலக தயார்! கவுதம் மேனனின் அதிரடி அறிக்கை

கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசுரன்', செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய இரண்டு படங்களின் ரிலீஸ் தாமதத்திற்கு இயக்குனர் கவுதம் மேனனே காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது

நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தாமதம் ஏன்? கவுதம் மேனன் மீது புகார்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடித்த படம் 'நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது.

அப்ப காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் ப்ளீஸ்: நெட்டிசன்கள் கிண்டல்

காவிரி மேலாண்மை அமைக்க சுப்ரீம் கோர்ட் விடுத்த கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதற்காக கடந்த சிலநாட்களாக பாராளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.