ஜிவி பிரகாஷ் பிரிவுக்கு பின் பாடகி சைந்தவி எடுத்த அதிரடி முடிவு.. என்ன செய்தார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,July 10 2024]

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தது திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறு வயது முதல் இருவரும் நட்பாக பழகி அதன் பின் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் தான் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் திடீரென இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்த நிலையில் தற்போது சைந்தவி அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.

இதுநாள் வரை சைந்தவி சமூக வலைதளங்களில் சைந்தவி பிரகாஷ் என்ற பெயர் இருந்த நிலையில் தற்போது பிரகாஷ் என்ற பெயரை நீக்கி சிங்கர் சைந்தவி என்று பெயரை மாற்றி உள்ளார். ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியை மீண்டும் இணைத்து வைக்க இருதரப்பு பெற்றோர்கள் முயற்சி செய்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிரகாஷ் பெயரை சைந்தவி நீக்கி உள்ளதால் இனி இருவரும் இணைய வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

இருப்பினும் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் இணைந்து ’சார்’ என்ற திரைப்படத்தில் பனங்கருக்கா என்ற பாடலை பாடி இருந்தனர். ஆனால் இந்த பாடல் அவர்கள் பிரிவு அறிவிப்புக்கு முன்பே ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. இனிமேல் இருவரும் தொடர்ந்து பாடுவார்களா என்பது கேள்விக்குறியே என்று கூறப்பட்டு வருகிறது.

More News

கௌதம் மேனன் அடுத்த படத்தின் பூஜை.. நாயகன் கன்பர்ம்.. நாயகி இவரா இருக்குமோ?

பிரபல இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் பூஜை குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

'கோட்' படத்தில் விஜயகாந்த் எத்தனை நிமிடம்.. இத்தனை பிரபலங்களும் சிறப்பு தோற்றமா?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம்

'ராயன்' திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ்.. இதற்கு முன் தனுஷின் 'ஏ' சான்றிதழ் படங்களின் லிஸ்ட்..!

தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பா ரஞ்சித் தனது கருத்தை வாபஸ் பெறுவார்: ஆம்ஸ்ட்ராங் விவகாரம் குறித்து தமிழ் நடிகர்..!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இது குறித்து பா.ரஞ்சித் தனது

இந்த ஆண்டு 2 படம், அடுத்த ஆண்டு 2 படம்.. பிரியாணி பக்கெட்டை தூக்கும் கார்த்தி..!

கார்த்தி நடித்து முடித்துள்ள இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டும் இரண்டு படங்கள் வெளியாகும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.