சாய்பல்லவி 'ஐ லவ் யூ' சொல்ல விரும்பிய நடிகர்

  • IndiaGlitz, [Saturday,September 10 2016]

மலையாள நடிகை சாய்பல்லவி என்றாலே அனைவருக்கும் 'மலர்' கேரக்டர்தான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு 'பிரேமம்' படத்தில் அவர் மலர் கேரக்டராகவே வாழ்ந்தார்.
தற்போது அவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். விரைவில் தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிகர் சூர்யாவின் மிகத்தீவிர ரசிகை என்றும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கின்றதோ இல்லையோ ஒரே ஒரு முறையாவது அவரை நேரில் பார்த்து 'ஐ லவ் யூ' என்று சொல்ல வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு மிகவும் பிடித்த படம் மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' என்று அவர் கூறியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் 'காற்று வெளியிடை' படத்தின் நாயகியாக முதலில் பரிசீலிக்கப்பட்டவர் சாய்பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விக்ரம் பிரபுவுக்கு 'லிப்லாக்' கொடுக்க ஷாம்லி தயங்கியது ஏன்?

சமீபத்தில் விக்ரம்பிரபு நடிப்பில் வெளிவந்த 'வாஹா' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'வீரசிவாஜி' திரைப்படம் ...

காவிரி நீர் பிரச்சனை. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுஹாசினி

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க கூடாது என கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம், அரசியல்...

முதன்முதலாக சீனியர் நடிகருக்கு ஜோடியான அமலாபால்

கோலிவுட் திரையுலகில் நடிக்கத்தெரிந்த மிகக்குறைந்த நடிகர்களில் ஒருவராகிய அமலாபால், சமீபத்தில் தனுஷூக்கு ஜோடியாக 'வடசென்னை'...

'இருமுகன்' முதல்நாள் தமிழக வசூல் நிலவரம்

'அரிமா நம்பி; ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்த 'இருமுகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...

'பைரவா' டைட்டிலில் ஒளிந்துள்ள ஐந்து முக்கிய ரகசியங்கள்

இளையதளபதி விஜய் நடித்த 60 வது படத்தின் டைட்டில் 'பைரவா' என கடந்த வாரம் அறிவித்தவுடன் இணையதளங்கள் அதிரும் வகையில்