சாய்பல்லவியின் தாராள மனதால் தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

  • IndiaGlitz, [Wednesday,January 09 2019]

கடந்த மாதம் 21ஆம் தேதி தனுஷூடன் சாய்பல்லவி நடித்த 'மாரி 2' திரைப்படம் ரசிகர்கள் அளவிலும், வசூல் அளவிலும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. ஆனால் அதே தினத்தில் சாய்பல்லவி நடித்த தெலுங்கு படமான 'Padi Padi Leche Manasu' என்ற படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு சுமார் ரூ.15 கோடி நஷ்டம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு இருக்கும் சம்பள பாக்கியை தயாரிப்பாளர் கொடுத்து வருகிறாராம்.

அந்த வகையில் சாய்பல்லவிக்கு கொடுக்க வேண்டிய ரூ.40 லட்சத்தை தயாரிப்பாளர் கொடுக்க முன்வந்தபோது, தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கருத்தில் கொண்டு பணத்தை வாங்க மறுத்துவிட்டாராம். சாய்பல்லவியின் பெற்றோரும் இதையே கூற தயாரிப்பாளர் நெகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. படம் வெற்றி அடைந்தாலும், தோல்வி அடைந்தாலும் கறாராக சம்பள பாக்கியை கேட்டு வாங்கும் நட்சத்திரங்களின் மத்தியில் சாய்பல்லவின் தாராள மனதால் டோலிவுட்டில் அவருக்கு மரியாதை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

More News

'விஸ்வாசம்' தடை: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

பைனான்ஸ் பிரச்சனை காரணமாக விஸ்வாசம்' திரைப்படத்தை ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை பகுதிகளில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்ததால் அந்த பகுதியில் உள்ள அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

'கடாரம் கொண்டான்' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் 'கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில்

விஸ்வாசம் படத்திற்கு தடை: 3 ஏரியா அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தை கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று ஏரியாக்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

'பேட்ட' ரிலீசுக்கு அடுத்த நாள் வெளியாகும் அனிருத் பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் பிரபலத்தின் வாரிசு அறிமுகம்

கடந்த ஆண்டின் வெற்றிப்பட நாயகனாக விளங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'மாமனிதன்'.