200 தொகுதிகளில் நடிகர்கள் கட்சி வெற்றி பெறும்: எஸ்.ஏ.சந்திரசேகர்

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

நடிகர்கள் பலர் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிப்பது குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கருத்து கூறிய இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அனைத்து நடிகர்களும் ஒன்றிணைந்து ஒரு கட்சியை ஆரம்பித்தால், அந்த கட்சி உறுதியாக 200 தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறினார்.

ஆனால் தற்போது நடிகர்கள் தனித்தனியாக தனிக்கட்சிகள் உருவாக்கி வருவதாகவும், இதனால் ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களின் ஓட்டு அந்தந்த நடிகர்களின் கட்சிக்கு சென்று பின்னர் மீண்டும் ஒரு ஊழல் ஆட்சி அமையவே வழிவகுத்துவிடும் என்றும் கூறினார்.

மேலும் 9 மணிக்கு ஆரம்பிக்கும் அறப்போராட்டத்திற்கு 11 மணிக்கு மேல் வரும் நடிகர்கள் எப்படி அரசியல் கட்சி ஆரம்பித்து மக்களை காப்பாற்ற போகின்றார்கள் என்று தெரியவில்லை என்றும் எஸ்.ஏ.சி கூறியுள்ளார்

More News

ரன்வீர்சிங், அனுஷ்கா ஷர்மாவுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகளில் குழப்பம்

பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்த ரன்வீர்சிங்கிற்கு தாதா சாகிப் பால்கே எக்ஸலன்ஸ் என்ற விருதினை தனியார் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் பாம்புகள்: வேல்முருகன் திடுக்கிடும் தகவல்

மலைவாழ் மக்கள் நூற்றுக்கணக்கான நாகப்பாம்புகளை மலையில் இருந்து பிடித்து வந்து சேப்பாக்கம் மைதானத்தில் விட திட்டமிட்டுள்ளதாக வேல்முருகன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கோடை மழை! வெதர்மேன் என்ன சொல்கிறார்

கோடை வெயில் தமிழகம் முழுவதும் கொளுத்தி கொண்டு வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே கோடைமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷாலும் மற்றும் புதிய நிர்வாகிகளும் பொறுப்பேற்றதில் இருந்தே பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்

ரசிக்க போறியா..? தவிர்க்க போறியா..?? ஐபிஎல் குறித்து ஜிவி பிரகாஷின் ஆவேச டுவீட்

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.