வேங்கை மகனாக மாறிய டெட் பூல் - தமிழ் ட்ரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Thursday,March 29 2018]

ரயன் ரெனோல்ட்ஸ் நடிப்பில் செம ரகள காமடி படமாக வந்த டெட் பூல் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்குறது நம் தமிழ் ரசனைக்கேற்ப  வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்னு ஒரு ஜோறுல டைலாக் பேசிட்டேன் மொத்தமா வந்துட்டானுங்க அவனுகள அடிச்சிட்டு வர லேட் ஆயிடிச்சு. என்று காதலியிடம் டெட் பூல் சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது காமடி பிளஸ் அதிரடி. 

வேட்டையாடு விளையாடு படத்தில் வந்த கமல் டைலாக்கான எங்கிட்ட மோதக்கூடாதுன்னு ஒங்கொம்மா சொல்லித்தராலயா என்றும் எதுவும் கிழியிலானா மறுபடியும் சந்திப்போம்  என்று படு லோக்கல் உரையாடல்களுடன் டப் செய்யப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தை பொறுத்தவரை முதல் பாகத்தை போல் இதிலும் நிறைய நக்கல்கள் நய்யாண்டிகள் அடல்ட் காமடி மற்றும் இடை விடாத ஆக்க்ஷன் என்று படம் களை கட்டப்போகிறது என்பது தெளிவாக தெரிகிறது. 

டேவிட் லீஷ் இயக்கியிருக்கும் டெட் பூல் 2 படத்தில் ரயன் ரெனோல்ட்ஸ், ஜாஷ் ப்ரோளின், சாக்ஷி பீட்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் உலகம் முழுவதிலும் படம் மே 18 ஆம் தேதி வெளியாகிறது . அதுவரை இந்த ட்ரைலரை பார்த்து மகிழலாம்

 

More News

பந்தை சேதப்படுதிய விவகாரம் குறித்து சச்சின் கருத்து

சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேதப்படுத்திய வீரர் மீதும்,

கமல்ஹாசனின் முதல் அரசியல் போராட்ட தேதி அறிவிப்பு

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் மதுரையில் கட்சி ஆரம்ப பொதுக்கூட்டம், பின்னர் சென்னையில் மகளிர் தின பொதுக்கூட்டம் ஆகிய இரண்டு கூட்டங்களை முடித்துவிட்டார்.

விமான விபத்தில் உயிர் தப்பிய பிரபல நடிகை

கடந்த 1990கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா. ரஜினியுடன் உழைப்பாளி, வீரா போன்ற படங்களிலும் மற்றும் பால் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடிகை ரோஜா ஜோடியாக நடித்துள்ளார்.

தோனியும் அஸ்வினும்: ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்யும் காணொளி

தல தோனி ஒரு மேட்ச் ஃபினிஷர் என்பதும் தோல்வி அடையும் நிலையில் இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் பதட்டமின்றி விளையாடி அணியை வெற்றி பாதைக்கு பலமுறை கொண்டு சென்றுள்ளார்

இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனை கொலை செய்த மனைவி: கள்ளக்காதலனும் உடந்தை

தர்மபுரி அருகே ரூ.55 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக கட்டிய கணவனை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.