69 குழந்தைகளைப் பெற்ற பெண்மணி? இந்த உண்மையை நம்ப முடிகிறதா?

  • IndiaGlitz, [Saturday,July 31 2021]

“நாம் இருவர், நமக்கு இருவர்“ என்பதே இன்றையக் காலக்கட்டத்தில் பெரும் சிரமமாக இருக்கிறது. ஆனால் ரஷ்யாவில் வாழ்ந்த பெண்மணி ஒருவர் 69 குழந்தைகளைப் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறார்.

இந்தத் தகவலை கேட்ட சில பேர் உண்மையிலேயே ஒருவர், இப்படி 69 குழந்தைகளை பெற்றிருக்க முடியுமா? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? எனச் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். இந்த ஆச்சர்யத்தை விட இந்த பெண்மணிக்கு பிறந்த குழந்தைகளின் வரிசையை பார்த்தால் நமக்கு தலையே சுற்றிவிடும்.

அதாவது ரஷ்யாவை சேர்ந்த ஃபியோடர் வாசிலியேவ் என்பவரின் முதல் மனைவி வாலண்டினா. இவர் கடந்த 1707 ஆம் வருடம் “சூயா“ எனும் நகரில் பிறந்துள்ளார். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர்கள் தொழில் ரீதியான காரணத்திற்காக சில காலம் சிறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தம்பதிகளுக்கு 16 ஜோடி இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த வகையில் 32 குழந்தைகள். அடுத்து 7 முறை தலா மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அந்த வகையில் 21 குழந்தைகள். அதேபோல இவர்களுக்கு 4 முறை தலா 4 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அந்த வகையில் 16 குழந்தைகள். இப்படியே வாலண்டினாவிற்கு 69 குழந்தைகள் பிறந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் செய்தியை கேட்கும் நம்மில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் இந்தத் தகவலை 1782 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி “நிக்கோல்ஸ் மடாலயம்“ எனும் பத்திரிக்கையில் கூறப்பட்டு ஈருக்கிறது. அதேபோல 1783 ஆம் ஆண்டு “ஜென்டில்மேன்“ எனும் பத்திரிக்கையிலும் இந்த அதிசயம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து விசாரணை செய்த கின்னஸ் ஆய்வுக்குழு இந்தத் தகவலை உண்மை என நிரூபித்து இருக்கிறது. கூடவே Guinness word Book of Reports புத்தகத்திலும் வாலண்டினாவின் பெயரை இடம்பெற இருக்கிறது. வாலண்டினா - ஃபியோடர் வாசிலியேவ் தம்பதிகளை நினைத்தால் மலைப்பாக இருக்கிறதா? இதைத்தவிர வாசிலியேவ்விற்கு இரண்டாவது மனைவியும் இருந்தாராம். அவருக்கு எத்தனை குழந்தைகள் என்ற தகவல் கின்னஸ் அதிகாரிகளிடம் இல்லை.

இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட நம்முடைய நெட்டிசன்கள் எப்படி வாலண்டினாவிற்கு தொடர்ந்து இரட்டை, மூன்று, நான்கு குழந்தைகள் என ஒரே பிரசவத்தில் பிறந்திருக்கும்? எனவும் கேள்வி எழுப்பி, வியந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஒட்டுமொத்த நாடும் எதிர்த்த ஒலிம்பிக் காதல்… தேசங்களை கடந்து வென்ற சுவாரசியம்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை ஒட்டி,

தடுப்பூசி போட்டுக்கொள்ள ரூ.7,000 ஊக்கத்தொகை? செம ஆஃபரை அறிவித்த நாடு!

கொரோனா நோய்த்தொற்று அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி அமெரிக்காவில் மக்கள் கடந்த சில மாதங்களாக முகக்கவசம் இல்லாமல் சாலையில் நடமாடும் காட்சியை பார்க்க  முடிந்தது

கீழடி வெள்ளி நாணயம் இவ்வளவு பழமையானதா? வியப்பூட்டும் ஆராய்ச்சி தகவல்!

சமீபத்தில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சின்னங்களுடன் கூடிய வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்ததைப் பற்றி தமிழ் ஆய்வாளர்கள்,

பெண்ணடிமை முடைநாற்றம் வீசிய காலத்தில் புரட்சி செய்தவர் முத்துலட்சுமி- முதல்வர் டிவிட்!

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், முதல் சட்டமன்ற உறுப்பினர், பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்,

மதிப்பீடே தவறாக இருக்கிறது… ஒலிம்பிக்கில் சர்ச்சையை கிளப்பும் மேரி கோம்… என்ன காரணம்?

“அயன் லேடி“ எனக் கொண்டாடப்படும் இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இதற்கு முன்பு, 6 முறை சாம்பியன்ஷிப்