ஏலம் குறித்த செய்திக்கு கவிதாலயா நிறுவனம் விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,February 13 2018]

கோலிவுட் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா நிறுவனம் வங்கி ஒன்றினால் ஏலத்திற்கு வருவதாக நேற்று செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றில் வங்கியின் விளம்பரமும் வந்திருந்தது

இந்த நிலையில் கவிதாலயா நிறுவனம் ஏலத்திற்கு வருவதாக வெளிவந்துள்ள செய்தியை அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் மறுத்துள்ளார். குறிப்பிட்ட வங்கியில் கவிதாலயா நிறுவனம் கடன் வாங்கியது உண்மை எனினும், மொத்த கடனையும் ஒரே செட்டில்மெண்டில் முடிக்க வங்கி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், எனவே ஏலத்திற்கு வருவதாக வெளிவந்துள்ள செய்தியில் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இயக்குனர் கே.பாலசந்தர் தனது கவிதாலயா நிறுவனத்தின் மூலம் ரஜினி, கமல், விஜய், விக்ரம், அரவிந்தசாமி உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காதலர் தினத்தில் கைகோர்க்கும் கவுதம் மேனன் - சூர்யா

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்கள் பெரும் வெற்றியை பெற்றது. அதன்பின்னர் மீண்டும் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைவார்கள்

மாதவன் தம்பதியின் தொடரும் காமெடி காட்சிகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் போலி வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த பிரபாகர் என்பவர் கைது செய்யப்பட்டார்

ஒரே இரவில் உலகப்புகழ் பெற்ற புருவ டான்ஸ் நடிகை

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஷெரில் சமூக வலைத்தளங்களில் பல நாட்கள் டிரெண்டில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

விஷால் மீது கொலை மிரட்டல் புகார் அளித்த பிரபல தயாரிப்பாளர்

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

முதல் பாதி 2D, இரண்டாம் பாதி 3D: பிரபல நடிகரின் வளர்ந்து வரும் படம்

ஜி.வி.பிரகாஷ் நடித்த படம் ஒன்று முதல் பாதி 2D ஆகவும், இரண்டாம் பாதி 3D தொழில்நுட்பத்திலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.