ரூ.400 கோடி வசூலித்த படத்தின் 2ஆம் பாகத்தில் ருக்மணி வசந்த்.. கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷடம்..!

  • IndiaGlitz, [Wednesday,March 20 2024]

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி ரூ.400 கோடி வசூல் செய்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை ருக்மணி வசந்த் நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து, தயாரித்து, இயக்கிய ’காந்தாரா’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமிழ் உள்பட தென் இந்திய மொழிகளிலும் இந்தியிலும் டப் செய்து வெளியான இந்த படம் வெறும் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவாகியது என்பதும், ஆனால் 400 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’காந்தாரா’ அடுத்த பாகத்தில் ருக்மணி வசந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அவர் நடிப்பதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்ட நிலையில் சமீபத்தில் லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ருக்மணி வசந்த் ஏற்கனவே விஜய் சேதுபதியின் 51வது படத்தில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் தான் அவர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மிகப்பெரிய ஜாக்பாட்டாக ’காந்தாரா’ படத்தின் அடுத்த பாகத்திலும் அவர் ஒப்பந்தமாக இருப்பதை அடுத்து அவருக்கு கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டி வருவதாக கூறப்படுகிறது.

More News

திருவனந்தபுரத்தில் ரஜினியை சந்திக்கிறாரா விஜய்? அரசியல் ஆலோசனை நடக்குமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை 'வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் செல்ல இருப்பதாகவும் ஏற்கனவே திருவனந்தபுரத்தில் இருக்கும் விஜய் அவரை சந்திக்க

சினிமா- ல துணை இயக்குனரா இருக்கறதுக்கு ,நான் ஏன் உங்க கூட படுக்கணும் ?

இளைஞர்களின் காதலை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை தோலுரிக்கும் திரைப்படம் தான் இந்த காடுவெட்டி.இதில் எந்த சாதியையும் ஏற்றியோ இறக்கியோ காட்டவில்லை...........

'கங்குவா' படத்தின் ஒன்லைன் கதையை லீக் செய்த முன்னணி நிறுவனம்.. அதிருப்தியில் ரசிகர்கள்..!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் குக்குகள் மற்றும் புதிய கோமாளிகள்.. முழு விவரங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும் இதனை அடுத்து ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகுமா?

தமிழ் ரசிகர்களை விட வெறித்தனம்.. விஜய்யை ட்ரோன் எல்லாம் வச்சு படமெடுக்கும் கேரள ரசிகர்கள்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில்