ரூ.300 கோடி வசூல் செய்த 'கோட்' திரைப்படத்தால் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டமா? அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,September 12 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ஆறு நாட்களில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில் தெலுங்கு மாநிலங்களில் மட்டும் இந்த படத்தின் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘கோட்’ திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தத்தை அடுத்து வசூலும் வாரி குவிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

‘கோட்’ திரைப்படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.125 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் ஆறு நாட்களில் இந்த படம் ரூபாய் 318 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றாலும் தெலுங்கு மாநிலங்களில் இந்த படம் போதிய வரவேற்பு தரவில்லை என்றும் 16 கோடி ரூபாய்க்கு இந்த படத்தின் உரிமை பெறப்பட்ட நிலையில் வெறும் 2.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு முன்பு வெளியான விஜய் படங்கள் தெலுங்கில் நல்ல வசூல் பெற்ற போதிலும் ‘கோட்’ திரைப்படத்திற்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்பது விநியோகிஸ்தர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் தமிழகம் உள்பட பல இடங்களில் இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் என்று கூறப்படுகிறது.

More News

சில விஷயங்கள் மாறுவதே இல்லை: மகன்கள் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவு...!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் சில விஷயங்கள் மாறுவதே இல்லை என தனது மகன்கள் குறித்து பதிவு செய்துள்ளார்.

பண வரவு அதிகரிக்க செய்ய வேண்டியது : பாலாறு சுவாமிகள்

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் பிரபல ஜோதிடர் பாலாறு சுவாமிகள் அளித்த சிறப்பு பேட்டியில், நம் அன்றாட வாழ்வில் எழும் பல்வேறு ஆன்மீக சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளித்துள்ளார்.

கர்ப்பமாக்கினார் நடிகர்.. நகையை திருடினார் நடிகை.. திடுக்கிடும் புகார் கூறிய பெண்..!

பிரபல நடிகர் தன்னை கர்ப்பம் ஆக்கியதாகவும், பிரபல நடிகை தன்னுடைய நகைகளை திருடியதாகவும் பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகார்

பாடகர் மனோ மகன்கள் பதுங்கி இருக்கும் இடம் இதுவா? விரைந்தது தனிப்படை போலீஸ்..!

மது போதையில் இருவரை தாக்கியதாக பாடகர் மனோ மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரும் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களுடைய இருப்பிடத்தை செல்போன்

அரசியலில் குதிக்கிறாரா கவுதம் கார்த்திக்? பிறந்த நாளில் ஒரு மாஸ் அறிவிப்பு..!

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான கவுதம் கார்த்திக் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.